http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Wednesday, July 31, 2013

தெலுங்கானா உதயம்: காங்கிரஸூடன் கைகோர்க்கும் நடிகை விஜசாந்தி.

தனி தெலுங்கானா மாநிலம் அமைவதைத் தொடர்ந்து, அதற்கான கோரிக்கைகளில் தீவிரமாக இருந்த நடிகை விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் சேர முடிவெடுத்துள்ளார்.


நடிகை விஜயசாந்தி ஆந்திராவின் மேடக் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.(மேலும்)

வாவ்! ஏஞ்சலீனா சம்பளம் ரூ 185 கோடியாம்.

ஹாலிவுட் பட உலகில் கடந்த ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய நடிகைகள் குறித்த விவரத்தை நியூயார்க்கில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.


அதில் நடிகை ஏஞ்சலீனா ஜோலி முதல் இடத்தை பிடித்திருக்கிறார். அவருடைய வருமானம் 33 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.185 கோடி) ஆகும்.   (மேலும்)

ஹரி இயக்கத்தில் நடிகர் விஜய்.

சென்னை: இயக்குனர் ஹரி விஜய்யை வைத்து படம் எடுக்க உள்ளாராம். இயக்குனர் ஹரி முதலில் விஜய்யிடம் தான் சிங்கம் கதையை தெரிவித்துள்ளார்.



ஆனால் விஜய் நடிக்க முடியாமல் போனது. இதையடுத்து தான் அந்த படத்தில் சூர்யா நடித்தார். (மேலும்)

அதிரடி ரயில் சண்டைக்காட்சியில் அஜீத்குமார்.

ஆரம்பம் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து, தற்போது சிறுத்தை சிவா படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் அஜீத். இதில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.

இந்த பெயரிடப்படாத படத்தின் 75 சதவிகித படப்பிடிப்பு முடிந்துள்ளதாம், இதில்  இரண்டு பாடல்களின் கம்போசிங்கையும் முடித்துவிட்டார் தேவி ஸ்ரீ பிரசாத். (மேலும்)

தவறி விழுந்தார்: நடிகை ஸ்ரீதேவி பலத்த காயம்.

1970 - 90களில்இந்திய உலகின்  கனவுக்கன்னியாக வந்த நடிகை ஸ்ரீதேவி. கணவர் போனிகபூர் மற்றும் மகள்களுடன் அமெரிக்கா சென்று இருந்தார்.


அங்கு சில நாட்கள் ஓய்வு எடுத்து விட்டு இந்தியா திரும்ப தயாரானார். அப்போது திடீரென  (மேலும்)

தெனாலிராமன் படப்பிடிப்பு.. குதிரை ஏறி மிதித்து வடிவேலு காயம்.

கடந்த வாரம் இறந்துப்போன தனது  வீட்டு காவலரின்  உடலை அவரது சொந்த நாடான நேபளத்துக்கு அனுப்பிவைத்தாராம் நடிகர் வடிவேலு.
 
அதில் முக்கிய விஷயமே, 'ஏதாவது உதவித்தொகை கொடுங்க' என்று காவலாளியின் குடும்பம் அனுப்பிய கடிதத்துக்கு ஒரு சல்லிக்காசு கூட கொடுக்கவில்லையாம் வடிவேலு என்கிறது சில நம்பகமான தகவல்கள். (மேலும்)

Tuesday, July 30, 2013

‘பில்லா'வை விட விறுவிறுப்பானது ஆரம்பம் - விஷ்ணுவர்த்தன்.

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத், ஆர்யா, நயன்தாரா  நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஆரம்பம்’ திரைபடத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. 


இதுவரை இப்படம் குறித்து படக்குழுவினர் யாருமே வாய்திறக்கவே இல்லை. இந்நிலையில், முதல்முறையாக இப்படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன் படத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து விவரித்துள்ளார்.  மேலும்

அட்டக்கத்தி இயக்குநரை நம்ப மறுத்த கார்த்தி.

கார்த்தி, வெங்கட் பிரபுவின் பிரியாணி, ஆல் இன் அழகுராஜா படங்கள் முடிந்தகையோடு அட்டக்கத்தி புகழ் இயக்குநர் ரஞ்சித்தின் படத்தில் நடிக்கவுள்ளார்

அட்டக் கத்தியின் வெற்றியும் சிறப்பான விமர்சனங்களும் ரஞ்சித்திற்கு நல்ல பெயரைக் கொடுக்க அவரின் இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் முயற்சித்தனர். 


இந்நிலையில் புதிதாக ரஞ்சித் உருவாக்கி கூறிய கதை நடிகர் கார்த்தியை ஈர்க்கச் செய்துள்ளது. இதனால் இப்படத்தில் நாயகனாக நடிக்க சம்மதித்தார் கார்த்தி.  (மேலும்)

நடிகை கனகா இறந்ததாக வதந்தி.

“கரகாட்டக்காரன்’ படத்தின் மூலம் அறிமுகமான பழம் பெரும் நடிகை தேவிகாவின் மகளான கனகா மறைவு என இன்று பிற்பகல் முதல் வதந்தி நிலவியது.


சில தொலைக்காட்சிகளும், இணையதளங்களும் செய்திகளை வெளியிட, செய்தியாளர்கள் ஒவ்வொருவரும், அது உண்மையா, பொய்யா என மாறி மாறி விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.

கேரளாவில் அவர் சிகிச்சை பெற்று வந்தார் என்று செய்திகள் ஏற்கெனவே வெளியாகின.  (மேலும்)

‘கரகாட்டக்காரன்’ புகழ் நடிகை கனகா மரணம்.

கரகாட்டக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த படம் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் ஓடி கனகாவை திரையுலகின் உச்சானி கொம்புக்கு கொண்டு சென்றது. இதனால் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களிலும் அவருக்கு வாய்ப்பு குவிந்தது.


தமிழில் ரஜினி, பிரபு, கார்த்திக் என முன்னணி நடிகர்களுடன் நடித்ததுபோல், மலையாளத்திலும் மோகன்லால், மம்முட்டி,  மேலும்

நடிகை ஷம்முவை மணக்கிறார் பரத்

நடிகர் பரத், நடிகை ஷம்முவை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளன.

அதாவது சமீபத்தில் நடிகர் பரத், தான் விரைவில் திருமணம் செய்ய விருப்பதாக அறிவித்திருந்தார். (மேலும்)

சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறும் அனுஷ்கா.

ஹீரோக்களை போல் நடிகை அனுஷ்கா சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறுவதற்காக பயிற்சியாளரை நியமித்திருக்கிறார்.

வேட்டைக்காரன், சிங்கம் போன்ற படங்களில் நடித்த அனுஷ்கா தற்போது தெலுங்கில் ஹீரோயினுக்கு ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ராணி ருத்ரம்மா தேவி, பாகு பாலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


இதற்காக கத்தி சண்டை (மேலும்)

Monday, July 29, 2013

ரஜினி ஈழத்துக்கு என்ன கிழிச்சாரு.. சுவடுகள் விழாவில் மோதல்.

பாலா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜெய்பாலா தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் சுவடுகள். ஜெய்பாலாவே இதில் கதாநாயகனாகவும் நடிக்கிறார்.
 
ஒளிப்பதிவும் செய்கிறார். இவர் ஹாலிவுட் திரைப்பட கல்லூரியில் பயின்றவர். நாயகியாக மோனிகா நடிக்கிறார். உன்னதமான காதல் உறவுகளையும் குடும்ப உறவுகளையும் யதார்த்தமான முறையில் சித்தரிக்கும் கதையம்சம் உள்ள படமாக தயாராகியுள்ளது.  (மேலும்)

அண்ணா ஆகிறார் தலைவா.

ஏ எல் விஜய் இயக்கத்தில் விஜய், அமலா பால் நடிக்கும் திரைப்படம் ‘தலைவா’. 


இப்படத்தை ஸ்ரீமிஸ்ரி புரொடக்ஷன்ஸ் சார்பில் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார். வேந்தர் மூவிஸ், அடுத்த மாதம் 9,ம் தேதி படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. 

இந்நிலையில் (மேலும்)


ஹாலிவுட் படத்தில் மாதவன்.

"அலைபாயுதே படத்தில் "சாக்லேட் பாய் கேரக்டரில் அறிமுகமான, மாதவனுக்கு, "ரன் படம், அதிரடி ஹீரோ என்ற பெயரைப் பெற்றுத் தந்தது.


அதற்கு பின், பல படங்களில் நடித்த அவர், பாலிவுட் படங்களிலும், நல்ல கேரக்டர்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனாலும், சமீபகாலமாக, அவரை, தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை.  (மேலும்)

ரூ 20 கோடி பெறும் ஜில்லா விஜய்.

தலைவா பட ரிலீஸூக்காக காத்திருக்கும் நடிகர் விஜய் அடுத்து நடித்துவரும் படம் 'ஜில்லா' இந்தப்படத்தில் விஜய்க்கு ரூ 20 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.


ஆனால் விஜய், அஜீத், சூர்யா, தனுஷ், சிம்பு, அட.. சிவகார்த்திகேயன் உள்பட பலருக்கும் கோடி ரூபாய் என்பது ஆரம்ப கட்ட படங்களிலேயே கிடைத்துவிட்டது.  (மேலும்)

அஜீத்திடம் தனது ரகசியத்தை பகிரும் லட்சுமிராய்.

எனது சொந்த விஷயங்களை அஜீத்திடம் பகிர்ந்துகொள்வேன் என்கிறார் பரபரப்பு நடிகை லட்சுமிராய்

இது பற்றி அவர் கூறியதாவது:

எனது 15 வயதில் நடிக்க வந்துவிட்டேன். ஆரம்ப காலத்தில் கேமரா முன் நிற்பதற்கு பயப்படுவேன். பிறகு என்னை தயார் படுத்திக்கொண்டேன். (மேலும்)

ஹன்சிகாவுடன் இணனையும் சாயாசிங்

முன்னாள் கனவுக்கன்னி ஜெயப்பிரதாவின் மகன் சித்தார்த் புதிய படத்தில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இந்தப் படத்தை ராஜசேகர் இயக்குகிறார். 

இவர் விஷாலை வைத்து சத்யம் படத்தை இயக்கியவர். படத்தில் நாயகியாக ஹன்சிகா நடிக்கிறார்.

 
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் (மேலும்)

தனுஷ் - அமலாபாலை இயக்கும் வேல்ராஜ்.

லண்டனில்  30-வது பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் தனுஷ், த‌னது ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்தாக தனது புதுப்பட அறிவிப்பை அளித்து மகிழ்ச்சி விருந்து அளித்துள்ளார் தனுஷ்.


தனுஷ் நடிப்பில் ஹிந்தியில் ராஞ்சனா 100 கோடிகளைத் தாண்டி வசூல் சாதனை புரிந்து வருகிரது. தமிழிலும் தனுஷ் நடிப்பில் வெளியான மரியான் வெற்றிகரமாக ஓடி வருகிறது. (மேலும்)

Sunday, July 28, 2013

கௌதம் மேனனை விடாமல் துரத்தும் த்ரிஷா.

த்ரிஷாவின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது கௌதம் மேனின் விண்ணைத் தாண்டி வருவாயா. இந்த படத்தில் த்ரிஷா காட்டன் புடவையில் வந்து ரசிகர்களை கிறுங்கடித்தார். அதன் பிறகு அவர் கமலுடன் சேர்ந்து நடித்த மன்மதன் அம்பு படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. சமரும் ஊத்திக் கொண்டது.


தற்போது அவர் பூலோகம், என்றென்றும் புன்னகை, ரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். (மேலும்)

  

Saturday, July 27, 2013

தலைவாவுக்கு யு சான்று தர தணிக்கை குழு மறுப்பு.

நடிகர் விஜய்யை வைத்து இயக்குநர் ஏ எல் விஜய் இயக்கியுள்ள படம் தலைவா.  இதில் விஜய்யுடன் அமலாபால் ஜோடி சேர்ந்துள்ளார். இந்தப்படம் மும்பை தமிழர்களுக்காக போராடும் தலைவனின் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

தலைவா படம் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு ரெடி. வருகிற 9ந் தேதி ரம்ஜான் பண்டிகை அன்று வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டார்கள்.  (மேலும்)

சூர்யாவை இயக்கும் ஏ.எல் விஜய்

சிங்கம் 2 வெற்றியை ருசித்த சூர்யா அடுத்து இரண்டு முக்கிய இயக்குநர்களுக்கு ஒரே நேரத்தில் கால்ஷீட் கொடுத்தார், இது உலகம் அறிந்த விடயம். 


அதாவது துருவ நட்சத்திரம் படத்துக்காக கௌதம் மேனனுக்கும், பெயரிடப்படாத புதிய படம் ஒன்றுக்கா லிங்குசாமிக்கும் கால்ஷிட்டை வழங்கினார்.

ஆனால் கௌதமின் துருவ நட்சத்திரம் ஆரம்பித்த வேகத்திலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. காரணம் துருவ நட்சத்திரத்தின் கான்செப்ட் பிடித்த அளவுக்கு அதன் திரைக்கதை பிடிக்கவில்லையாம் சூர்யாவுக்கு.
அதே போல்  லிங்குசாமியின் படமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,  (மேலும்)

சோலர் மோசடி விவகாரம் - ம‌ம்முட்டியிடம் போலீஸ் விசாரனை.

சோலார் பேனல் மோசடியில் கைதான பிஜு ராதா கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி சரிதாநாயரிடம் இருந்து பண ஆதாயம் பெற்றவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் இடம் பெற்றவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 


இந்த பட்டியலில் நடிகர் மம்முட்டியின் பெயரும் இருப்பதாக செய்திகள் வெளியானது. மேலும்

பவர்ஸ்டாருக்கு பயந்து ஒதுங்கும் விஜய்.

இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் அமாலாபால் ஜோடியில் உருவான 'தலைவா' படம் ஆகஸ்ட் 9 ஆந்தேதி ரிலீஸாவது உறுதியாகிவிட்டது.

 
இதனால் அடுத்தகட்டமாக எந்தெந்த முக்கிய ஊர்களில் படம் வெளியாகிறதோ அங்கெல்லாம் பிரமாண்ட பப்ளிசிட்டிகளை முடுக்கி விட இப்போதே தலைவா டீம் வீறுகொண்டு நிற்கிறது.  (மேலும்)

லண்டனில் கருத்துக் கணிப்பு: சிறந்த நடிகர் அமிதாப்பச்சன்.

இந்திய திரைப்பட‌ நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு லண்டனில் சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 


அதில் இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாரும், பழம்பெரும் நடிகருமான அமிதாப் பச்சன் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 
இங்கிலாந்து நாட்டில் வெளிவரும் ஆசிய வாராந்திரப் பத்திரிகை    (மேலும்)

Friday, July 26, 2013

பண மோசடி விவகாரம் - நடிகை லீனா மரியாபாலுக்கு ஜாமீன்.

சென்னை: பல கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட  நடிகை லீனா மரியா பாலுக்கு ஜாமீன் வ‌ழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 
சென்னையிலுள்ள கனரா வங்கியில் போலி ஆவணங்களை காட்டி ரூ.18.5 கோடி பணத்தை மோசடி செய்த வழக்கில் கடந்த மே மாதம் லீனா மரியா பாலை சென்னை போலீஸார் கைது செய்தனர். இந்த மோசடிக்கு காரணமான இருந்த சென்னையைச் சேர்ந்த இவரது காதலன்  (மேலும்)

சாதா யானையாக வலம் வரும் பட்டத்து யானை - விமர்சனம்

நடிகர்கள்: விஷால் ஐஸ்வர்யா அர்ஜூன், சந்தானம், மயில்சாமி
 
தயாரிப்பாளர்: எஸ் மைக்கல் ராஜப்பன்
 
இயக்குநர்:ஜி பூபதி பாண்டியன்
 
இசையமைப்பளர்:எஸ் தமன்
 
ஒளிப்பதிவாளர்: எஸ் வைதி

பூபதிபாண்டியனின் படத்தில்  ரெண்டு விஷயத்தை கண்டிபாக எதிர்பார்க்களாம் ஒண்ணு ஆக்ஷன் ரெண்டாவது காமெடி. ரெண்டுலேயும் எந்த குறையும் வைக்கல. ஆனால் திரைக்கதை என்ற ஒன்று இருப்பதை இப்ப வர்ற பெரிய நடிகர்களின் படங்களில் மறந்து விடுகிறார்கள் இந்த படமும் அதற்கு விதிவிலக்கல்ல‌..

படங்களுக்கு பெரிய வியாபாரம் இருப்பதால், எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்பதற்க்காக நிறைய விஷயங்களை கதையில் திணிப்பதால் வர்ற தொல்லை இந்த படத்திலும் இருக்கிறது. பல இடங்களில் கதை தூங்கி தூங்கி விழிக்கிறது.  (மேலும்)

 

சமந்தாவின் பெரிய மனசு.

பொதுச்சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் நடிகைகளின் பட்டியல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 


த்ரிஷா, ஸ்ரேயா, ஹன்சிகா லிஸ்டில் சமந்தாவும் இணைந்திருப்பதுதான் லேட்டஸ்ட் டாக்.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக (மேலும்)

ஆள விடுங்க சாமி லவ்வே வேணாம் - நயன்தாரா.

சிம்பு, பிரபுதேவா என‌ இருவரிடமும் காதலில் விழுந்து நொந்து நூலாகி அந்து அவலாகி போனாவர் நடிகை நயன்தாரா, பிரபுதேவவுடனான காத‌லுக்காக மதம் மாறி திருமணம் வரை சென்றவர் நயன் ஆனால் அது கை கூடவில்லையென்பது உலகம் அறிந்த விஷயம்.


இப்படி காதலில் ரவுண்டுகட்டி அடி வாங்கிய நயன் மீண்டும் நடிகர் ஆர்யாவுடன் கிசுகிசுக்கப்பட்டார் (மேலும்)

30-வது பிறந்த நாள் - நண்பர்களுடன் லண்டன் பறந்த தனுஷ்

தனுஷைப் பொறுத்தவரை இந்த ஆண்டு மறக்க முடியாதது. அவரது முதல் இந்திப் படம் ராஞ்ஜனா பெரும் வெற்றி பெற்று, ரூ 100 கோடியை அள்ளியுள்ளுது.

அதேபோல் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்துக்காக 2 பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். மரியான் படம் தமிழில் சரியாகப் போகவில்லை என்றாலும் அவர் நடிப்புக்கு ஏக பாராட்டுகள். (மேலும்)

நான் யாரையும் விரும்பல்ல... விஷால்

விஷால் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. அவரே ஒரு நடிகையை விரும்புவதாகவும் அறிவித்தார். பிறகு அச்செய்தி அடங்கி போனது. தற்போது மீண்டும் அவர் காதலில் விழுந்துள்ளதாக பேச்சுக்கள் உலவுகின்றன.


இதுகுறித்து விஷாலிடம் கேட்டபோது மறுத்தார். கடந்த காலத்தில் எனக்கு காதல் இருந்தது. ஆனால் இப்போது இல்லை. யாரையும் காதலிக்காமல் தனியாகத்தான் இருக்கிறேன் என்றார்.  மேலும்

'வணக்கம் சென்னை'யில் அனிருத்துடன் ஆண்ட்ரியா

நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி   கிருத்திகா உதயநிதி இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் ‘வணக்கம் சென்னை’. இந்த படத்தினை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்தான் தயாரிக்கிறது. 


இதில் மிர்ச்சி சிவா நாயகனாகவும், பிரியா அனந்த் நாயகியாகவும் நடிக்கின்றனர். சந்தானம் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். காமெடியை பின்னணியாக கொண்டு படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். (மேலும்)


ஒரே காமெடி தான் போங்க..நூறாவது நாளில் திருமதி தமிழ்.

நடிகை தேவயானியும் அவரது கணவர் ராஜகுமாரனும் இணைந்து நடித்த திருமதி தமிழ் திரைப்படம் (நாடகம்) இன்று 100வது நாளில் வெற்றிவாகை சூடியுள்ளதாம்.


ந‌டிகை தேவயானியின் கணவரும், இயக்குனருமான ராஜகுமாரன் பல  பல வருடமாக டைரக்ட் செய்துகொண்டிருந்த படம் திருமதி தமிழ். (மேலும்)

Thursday, July 25, 2013

ஹரிப்பிரியாவால் பீதியில் குத்தாட்ட நடிகைகள்.

கனகவேல் காக்க படத்தின் மூலம்,  தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகை ஹரிப்பிரியா. 



தற்போது, அட்டக் கத்தி தினேசுக்கு ஜோடியாக, "வாராயோ வெண்ணிலாவே என்ற படத்தில் நடித்து வருகிறார். (மேலும்)

எனக்கேற்ற காமெடி ஜோடி சிவகார்த்தி தான் - தனுஷ்.

கோலிவுட், பாலிவுட் என இந்திய சினிமாவில் ரவுண்டுகட்டி கலக்கி வரும் நடிகர் தனுஷ், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தன்னுடன் நடித்த நடிகர்கள், தன்னுடைய படங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.

 
அதில் சினிமா தான் தன்னை வாழ வைத்த தெய்வம் என்றும் தன்னை சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய அண்ணன் செல்வராகவன்தான் தன்னுடைய அப்பா என்று கூறினார்.  (மேலும்)

ச‌கோதரனை கொலை செய்ய முயற்சித்த‌ - நவ்யா நாயர்.

சென்னை: தனது புத்தகத்தில் தனது தம்பியை கொலை செய்ய முயன்றதாக எழுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை நவ்யா நாயர்.


கேரளத்திலிருந்து ராதா மோகனின் அழகிய தீயே படம் மூலம் கோலிவுட் வந்த அழகி கிளி நவ்யா நாயர். (மேலும்)

நானியின் ஆசையை நிறைவேற்றிய கமல்

நான் ஈ புகழ் நானிக்கு சிறுவயதிலிருந்தே  உலகநாயகன் கமல்ஹாசன் என்றால் கொள்ளை பிரியமாம்,

 
இதனால்  தனது வாழ் நாளில் கமல்ஹாசணை ஒரு தடவையாவது சந்திக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை.


ஆனால் சந்தர்ப்பம் அமையவில்லை. நானி ஒரு நடிகராக உருவான பிறகு,  மேலும்  

எப்படி? சிம்புவின் வலையில் விழுந்தார் ஹன்சிகா - ருசிகரம்

சிம்புவும், ஹன்சிகாவும் தங்களுடனான காதலை வெளிப்படையாக  அறிவித்து விட்டனர். சிம்புவௌடன் ‘வேட்டை மன்னன்’, ‘வாலு’ படங்களில் ஜோடியாக நடித்த்வருகிறார் ஹன்சிகா. 


அப்போது தான நெருக்கம் ஏற்பட்டது. ஆனால் அது எப்படி காதலாக மலர்ந்தது என்ற செய்தி உங்களுக்குத்தெரியுமா?

அது இப்படித்தான்,... (மேலும்)

சுவேதா மேனனின் நிஜ பிரசவத்துக்கு சென்சார் அனுமதி.

நிஜ பிரசவ காட்சியில் நடித்த சுவேதா மேனன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்தது. இப்படத்தை எதிர்த்து போராடப் போவதாக பெண்கள் அமைப்பு அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரவான்’ படத்தில் நடித்தவர் சுவேதா மேனன். மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இயக்குனர் பிளஸ்சி இயக்கும் ‘களிமண்ணு’ என்ற படத்தில் நடிக்கிறார். (மேலும்) 

Wednesday, July 24, 2013

கீர்த்தியுடன் காதல் இல்லை நட்புத்தான் - சாந்தனு

இயக்குனர் பாக்யராஜின் மகன் சாந்தனு. இவர் சக்கரக்கட்டி, சித்து பிளஸ் 2, அம்மாவின் கைப்பேசி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.


இவருக்கும் சி்ன்னத்திரை தொகுப்பாளினியான கீர்த்திக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் இது தொடர்பாக இருவர் வீட்டிலும் பேசிவருவதாகவும் வார இதழ் ஒன்றில் பேட்டி வெளியாகி உள்ளது.


இதுகுறித்து சாந்தனுவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது அதனை மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:மேலும்

தண்ணீர் பஞ்சமா கருப்புக்கு மனு போடுங்க.

காமெடி நடிகர் கஞ்சா கருப்பு வேல் முருகன் போர்வெல் படத்தை தயாரித்து வருகிறார். அதில் முக்கிய கேரக்டரிலும் நடிக்கிறார். 


அங்காடி தெரு மகேஷ், ஆருஷி ஹீரோ ஹீரோயின்கள். மலையன் படத்தை இயக்கிய கோபி இயக்குகிறார்.
 
 காரைக்குடி, சிவகங்கை, நாட்டரசன்கோட்டை பகுதிகளில் இதன் ஷூட்டிங் நடந்து வருகிறது. (மேலும்)

அஜீத்தின் 53வது பட டைட்டில் 'ஆரம்பம்'

அஜித்குமாரின்  53வது படத்துக்கு ஆரம்பம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக நம்மபத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.


ஒரு சில படங்களுக்கு டைட்டில் வைத்தபிறகுதான் பிரச்சனைகள் முளைக்கும். ஆனால், அஜித்தின் 53வது படத்துக்கு டைட்டிலே வைக்காமல் பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள் விஷ்ணுவர்த்தன் குழுவினர். மேலும்

தன‌து 38வது பிறந்த நாளில் தந்தையானார் விஜய் ஆண்டனி.

விஜய் ஆண்டனி இன்று தனது 38வது பிறந்த நாளை கொண்டாடுகிறார், இந்த பிறந்த நாளில் அவருக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி தரும் விஷயம் நடந்துள்ளது.

 
ஆமாங்க இன்று அழகிய பெண் குழந்தைக்கு தந்தையாகியிருக்கிறார் விஜய் ஆண்டனி. மேலும்

ராஞ்சனா வசூல் - பாலிவுட்டை தூக்கி சாப்பிட்ட‌ தனுஷ்.

மும்பை: ஆன்ந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ்- சோனம் கபூர் நடிப்பில் இந்தியில் வெளியான படம் ராஞ்ஜனா ரூ 100 கோடியை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. பாலிவுட்டில் எந்த புதிய நடிகருக்கும் கிடைக்காத கவுரவமாக இது பார்க்கப்படுகிறது.


இந்த வெற்றி தனுஷின் சமீபத்திய வெளியீடான மரியானுக்குக் கிடைத்த மரண அடிக்கு ஒத்தடமாக அமைந்துள்ளது. (மேலும்)

கல்லுரியில் நானும் ரவுடிதான் - சொல்கிறார் சமந்தா.

தெலுங்கில் பிசியாக இருக்கிறார் சமந்தா. தமிழிலும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. `நான் ஈ' படத்தில் நடித்ததற்கான சிறந்த நடிகைக்கான `பிலிம் பேர்' விருதும் அவருக்கு கிடைத்துள்ளது. 


சினிமாவுக்கு வரும் முன் கல்லூரியில் படித்த போது நடந்த சம்பவங்களை மலரும் நினைவுகளாக சமந்தா வெளியிட்டார்.

அவர் கூறியதாவது:- மேலும் பதிவினை படிக்க‌

Tuesday, July 23, 2013

நடிகை மஞ்சுளாவுக்கு அஞ்சலி - திரண்டது திரையுலகம்!

சென்னை: நடிகை மஞ்சுளாவின் மரணம் தமிழ் சினிமா கலைஞர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. தமிழ் திரையுலகமே ஒட்டுமொத்தமாக அவருக்கு அஞ்சலி செலுத்தத் திரண்டுவந்ததே அதற்கு சாட்சியாக அமைந்தது.


நேற்று தன் ஆலப்பாக்கம் வீட்டில் கீழே விழுந்ததில் கட்டில் கால் குத்தி வயிற்றில் அவருக்கு பலமாக அடிபட்டதால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மஞ்சுளா, சிகிச்சை பலனின்று இறந்தார். (மேலும்)

நிஜமாவே அனுஷ்காவுக்கு கத்தியால் குத்திய மகேஷ் பாபு.

அருந்ததி மெகா ஹிட் படத்தையடுத்து அனுஷ்கா நடித்து வரும் சரித்திர கால படம் ராணி ருத்ரம்மா தேவி. இது 3டியில் தயாராகும் முதல் சரித்திர படமாகும். இந்த படத்துக்காக 6 மாதங்களுக்கு மேலாக கால்சீட் கொடுத்து நடித்துவருகிறார் அனுஷ்கா,


இப்படத்தில்,அனுஷ்காவுடன் தெலுங்கு சினிமாவின், முக்கியஹீரோக்களில் (மேலும்)

நஸ்ரியா நசீமால் ஓரங்கட்டப்படும் நயன்தாரா.

அச்சு அசல் தன்னை போல் இருக்கும் நஸ்ரியா நசீம் மேல் கடுப்பில் இருக்கிறாராம் முன்ணனி நடிகை நயன்தாரா. 


கஹானி ரீமேக்கான அனாமிகாவில் நடித்து வரும் நயன்தாராவின் கால்சீட் டைரி தொடர்ந்து புல்லாக இருந்து கொண்டிருக்கிறது.
அதிலும் தன்னைத்தேடி வரும் பல படங்களில் சில படங்களை மட்டுமே ஓ.கே செய்கிறார். பல படங்களை கதை பிடிக்கவில்லை அல்லது ஹீரோ சரியில்லை என்பது போன்ற காரணங்களை சொல்லி ஓரங்கட்டி விடுகிறார். (மேலும்)

கஸ்தூரி ராஜாவின் ‘காசு பணம் துட்டு’.

தனுஷ் நடித்த ‘3’ படத்தைத் தொடர்ந்து ‘ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பாக விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா தயாரிக்கும் படம் ‘காசு பணம் துட்டு’.

 
இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி கஸ்தூரி ராஜா இயக்குகிறார். முதலில் படத்திற்கு ‘அசுரகுலம்’ என்று பெயர் வைத்திருந்தனர்.

பின்னர் அதனை மாற்றி தற்போது ‘காசு பணம் துட்டு’ [மேலும்]

 

Copyright @ 2013 எமது ஈழம் .