http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Saturday, May 4, 2013

கே.எஸ்.ரவிக்குமார் பட ஷூட்டிங்கில் நடிகர் சஞ்சய் தத் டென்ஷன்: படப்பிடிப்பில் பரபரப்பு!


கே.எஸ்.ரவிக்குமார் பட ஷூட்டிங்கில் சஞ்சய் தத் டென்ஷனாக இருப்பதால் செட்டில் பரபரப்பு நிலவுகிறது.
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றிருக்கும் சஞ்சய் தத். இதனால் விரக்தி அடைந்திருக்கிறார். அவர் மீது கருணை காட்ட வேண்டும் என்ற மும்பை படவுலகினர் கருத்து தெரிவித்திருக்கின்றனர். ஆனால் தண்டனையை ஏற்கப்போவதாக சஞ்சய் தத் கூறினார்.

இதற்கிடையில் படங்களில் நடித்து கொடுக்க வேண்டி இருப்பதால் கோர்ட்டில் சரண் அடைய அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் அவருக்கு 4 வாரம் அவகாசம் அளித்து கோர்ட் உத்தரவிட்டது.


தமிழில் விக்ரம் நடித்த ‘சாமி‘ படம் இந்தியில் ‘போலீஸ் கிரி‘ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதன் ஷூட்டிங்கில் சமீபத்தில் சஞ்சய்தத் கலந்துகொண்டார். மேலும் பதிவினை படிக்க‌

இந்தியனாக இரு.. சீனப் பொருள்களை வாங்காதே – அர்விந்த் சாமி!


சென்னை: சீனத்துப் பொருள்கள் எதையும் இந்தியர்கள் வாங்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் அரவிந்த் சாமி.
இந்திய எல்லைப் பகுதியான லடாக்கில் 19 கிமீ தூரம் அத்து மீறி ஊடுருவியுள்ளது சீனப் படை. சீனப் படை ஊடுருவியுள்ள பகுதி கிட்டத்தட்ட டெல்லி மாநிலத்தின் பாதிப் பரப்பளவுக்கு இணையான பகுதியாகும்.


சீன ராணுவத்தின் எல்லை மீரல் இந்தியா முழுவதும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது ஊடுருவலை நியாயப்படுத்தி வரும் சீனா, அங்கிருந்து பின்வாங்கவும் மறுத்து வருகிறது.


இந்நிலையில் தமிழ் நடிகர்களில் அரவிந்த்சாமி சீனாவுக்கு எதிராக தனது கோபத்தை தனது சமூக வலைத்தளமான டிவிட்டரில்  காட்டிட்யுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது, மேலும் பதிவினை படிக்க‌

எம்.ஜி.ஆர் வேடம் போடும் நடிகர் எம்.ஜிஆர். சிவா திடீர் மரணம்!


நடிகர் எம்.ஜிஆர். சிவா சென்னையில் இன்று உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 28.

எம்.ஜி.ஆர். சிவாவுக்கு சொந்த ஊர் பழனி. இவர் சென்னை ஆதம்பாக்கத்தில் தங்கி இருந்து மேடை கச்சேரிகளில் எம்.ஜி.ஆர் வேடம் போட்டு நடித்து வந்தார். 

லஷ்மன் ஸ்ருதி, யு.கே. முரளி உள்ளிட்ட பல இசைக்குழுக்களின் கச்சேரிகளில் எம்.ஜி.ஆர் வேடத்தில் மேடை ஏறி நடனம் ஆடினார். 

வாலிபன் சுற்றும் உலகம் படத்தில் கதாநாயகனாகவும் நடித்தார். பிதா மகன், அழகன் அழகி படங்களிலும் நடித்து உள்ளார். மேலும் பதிவினை படிக்க‌

கர்ப்பமான நயந்தாரவை ரசிகர்கள் முற்றுகை!

இந்தியில் வித்யாபாலன் நடித்த ‘கஹானி படத்தை தமிழ், தெலுங்கில் நடிகை நயன்தராவை வைத்து  ரீமேக் செய்யப்படுகிறது. 


நயன் நடிக்கும் இந்த ரீமேக் படத்தை சேகர் கம்முலா இயக்குகிறார். இதற்கு இன்னும் பெயரிடப்படவில்லை

இந்த படத்துக்காக  கணவரை தேடி கர்ப்பிணி கோலத்தில் ஐதராபாத் வீதிகளில் நயன்தாரா அலையும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ரசிகர்கள் அவரை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பதிவினை படிக்க‌

சுந்தர்.சியின் ஆஸ்தான நடிகையான.. குட்டி குஷ்பு!

சித்தார்த், ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் படம் 'தீயா வேலை செய்யனும்குமாரு'. சுந்தர்.சி இயக்குகிறார். யூ.டி.வி. மோஷன் பிக்சர்ஸ் மற்றும் அவ்னி சினிமாக்ஸ் தயாரிக்கின்றன. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடந்தது.


இதில் சுந்தர்.சி பங்கேற்று பேசியதாவது:-

ஹன்சிகாவை இந்த படத்தில் நடிக்க வைத்தது நல்ல அனுபவம். நான் படம் ஆரம்பிக்கும் முன்கதை விவாதத்துக்கு நிறைய நாள் எடுத்துக் கொள்வேன். படப்பிடிப்பு தொடங்கியதும் ஆறு மாதத்துக்குள் படத்தை முடித்து விட நினைப்பேன். விரைவாக முடிந்தால் தான் படத்தின் புதுத்தன்மை மாறாமல் இருக்கும். தயாரிப்பாளருக்கும் நல்லது. அதற்கேற்றபடி ஹன்சிகா ஒத்துழைப்பு கொடுத்தார். மேலும் பதிவினை படிக்க‌

சிறந்த தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி பிரணாப்!


வழக்கு எண் 18/9 படத்துக்கு சிறந்த மாநில மொழி படத்துக்கான விருதினை வழங்கினார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

 
2012-ம் ஆண்டுக்கான தேசிய சினிமா விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டு, இந்திய சினிமாவின் நூற்றாண்டை குறிக்கும் அஞ்சல் தலையை வெளியிட்டார். 

 
பின்னர் தேசிய சினிமா விருதுகளை வழங்கினார். சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த எழுத்தாளர், குறும்படங்கள், ஆவணப்ப்படங்களுக்கான விருதுகள் என பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் பதிவினை படிக்க‌

விஜய் படங்களுக்கு நிகராக.. சிவாவின் எதிர்நீச்சல் முதல் நாள் வசூல்!


தனுஷ் தயாரித்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மே 1ல் வெளியான எதிர் நீச்சல் முதல் ஒரு நாள் வசூல், நான்கு கோடியை எட்டியது தமிழ்ப்பட உலகில் சாதனையாகக் கருதப்படுகிறது.


இது விஜய் நடிக்கும் படத்தின் முதல் நாள் வசூலில் எண்பது சதவிகிதம் என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் நிலவர கணக்கில். 


உலகெங்கும் வெளியான படம், தமிழ்நாட்டில் மட்டும் 300 தியேட்டர்களில் வெளியானது குறிப்பிடத் தக்கது. மேலும் பதிவினை படிக்க‌

 

Copyright @ 2013 எமது ஈழம் .