http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Friday, September 20, 2013

6 திரைப்பட விமர்சனம் (ஷாமின் நம்பிக்யை வீணடிக்காது)

6(ஆறு) தொடங்கி பத்தாவது நொடியில் அணையை உடைத்துக்கொண்டு பாய்கிறது வேகமாக (கதையை சொல்கிறேன்). கதை தொடங்கிய பத்தாவது நொடியில் நமக்கும் பதட்டம் தொடங்கிவிடுகிறது. அடுத்த காட்சி, அடுத்த காட்சி என்று நம்மில் பதட்டம் தாவி இழுத்துக் கொண்டு ஓடுகிறது. முடியும்போது நம்மையறியாமல் சிந்துகிற ரெண்டு சொட்டு கண்ணீருக்குள்தான் இந்த படத்தின் ஹிட்டும் அடங்கியிருக்கிறது.


ஷாம்- பூனம் தம்பதியர் தங்களின் ஒரே மகனின் 6-வது பிறந்த நாளை கொண்டாடி விட்டு கடற்கரைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு மகனை தவற விடுகிறார்கள். தொலைந்து போன மகனை தேடி அலைகிறார்கள். கிடைக்காத சூழ்நிலையில் காவல் துறையில் தகவல் தெரிவிக்கிறார்கள். (மேலும்)

நூற்றாண்டு விழாவில் எனக்கு அழைப்பில்லை - பாலுமகேந்திரா வருத்தம்.

"தமிழ்த் திரைப்படத்தில் இலக்கியத்தின் தாக்கம்' என்ற தலைப்பில் சாகித்ய அகாதெமி சார்பில் 2 நாள் கருத்தரங்கம் சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

 
இந்தக் கருத்தரங்கில் இயக்குநர் பாலுமகேந்திரா, எழுத்தாளர்கள் பொன்னீலன், நாஞ்சில்நாடன், ந.முத்துசாமி, திரைப்பட இயக்குநர்கள் ஞானராஜசேகரன், சசி, அம்ஷன் குமார், கௌதமன், சாகித்ய அகாதெமியின் செயலாளர் கே.ஸ்ரீனிவாசராவ், அந்த அமைப்பின் தமிழ் ஆலோசனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசாமி நாச்சிமுத்து, பொறுப்பு அலுவலர் அ.சு. இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இந்த விழாவில் பாலுமகேந்திரா பேசிய‌தாவது,..(மேலும்)

கௌரவ வேடத்தில் 'ஜமாய்'க்கும் ஆனந்த் பாபு.

தமிழில் 2012 வெளிவந்த 'ஏதோ செய்தாய் என்னை' திரைப்படத்தில் இறுதியாக நடித்திருந்த நடிகர் ஆனந்த பாபு மீண்டும் ' கௌரவ வேடம் ஏற்கவுள்ளார்.

 
கிளாசிக் சினி சர்க்யூட் என்ற படநிறுவனம் சார்பாக எம்.ஜெயக்குமார் தயாரித்து இயக்கும்  (மேலும்)

'பீட்சா 2 தி வில்லா' காந்தி ஜெயந்தி அன்று ரிலீஸ்.

விஜய் சேதுபதி- ரம்யா நம்பீசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'பீட்சா'. இந்தப் படத்தை கார்த்திக் சுபுராஜ் என்பவர் இயக்கியிருந்தார். சி.வி. குமார் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். கோபி அமர்நாத் ஒளிப்பதி செய்திருந்தார்.

 
இந்தப் படத்தின் 2-ம் பாகம் 'பீட்சா 2 தி வில்லா' என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது. (மேலும்)

சிமா விருது நிகழ்வில் ராண -த்ரிஷா ஒரே கிளுகிளுப்பாமே!

திரிஷாவுக்கும் ராணாவுக்கும் இடையில் காதல் தீ பத்தி எரிகிறதென ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன. ஆனால் தங்கள் இருவருக்கும் காதல் இல்லையெனவும் பத்திரிகையளர்கள் வதந்தி பரப்புவதாகவும் இருவரும் சூடம் கொளுத்தி சத்தியம் பண்ணாத குறைதான்.


இந்நிலையில் இருவரின் இந்த காதல் கிசு, கிசுக்கள் பரவுவதை நம்பாதவர்கள் கூட துபாயில்  (மேலும்)

மனைவி கிருத்திகா இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்!

ந‌டிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி ‘வணக்கம் சென்னை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார்.


 
இப்படத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், (மேலும்)

அபிநயாவின் நடிப்பில் சொக்கிப்போன‌ அஜீத்குமார்.

சிவா இயக்கும் 'வீரம்' படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார் அஜீத்குமார். இதில் அஜீத்துக்கு ஜோடியாக  தமன்னா நடிக்கிறார்.


இவர்களுடன் சந்தானம், விதார்த், அபிநயா ஆகியோரும் நடிக்கிறார்கள். படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதாக அறிவித்து இருக்கிறார்கள். (மேலும்)

 

Copyright @ 2013 எமது ஈழம் .