நடிகை அஞ்சலி நேற்றிறிரவு 10 மணி அளவில் ஐதராபாத்தில் உள்ள ஜுபிலி ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். கடந்த 5 நாட்களாக அஞ்சலி எங்கு தங்கியிருந்தார்? அவருக்கு அடைக்கலம் தந்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதன் படி, நேற்று இரவு, ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்ற அஞ்சலி, தன்னை யாரும் கடத்தவில்லை; விரும்பித் தான் வீட்டை விட்டு வெளியேறியதாக விளக்கம் அளித்தார்.
பின்னர் இன்று தான் முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்கிறேன். இப்போது சோர்வாக இருக்கிறேன். நான் அனுபவித்த சித்ரவதைகளை முழுவிவரத்தையும் வெளிப்படையாக விரைவில் சொல்வேன். இன்னும் 3 நாட்களில் நான் ஷூட்டிங்கில் பங்கேற்பேன். இத்தனை நாள் நான் பாதுகாப்பான இடத்தில் இருந்தேன். எனது வாக்குமூலத்தை போலீசிடம் பதிவு செய்திருக்கிறேன் என்றார்
போலீசில் வந்து ஆஜரானது முதல் தனது சோகத்தை பகிர்ந்து கொண்டதுவரையிலான அஞ்சலியின் வீடியோவை பார்வையிட க்ளிக் பண்ணவும்!