தேவையே இல்லாமல் அரசியலில் மூக்கை நுழைத்து பஞ்சராக்கிக்கொண்டவர் வடிவேலு.
தமிழில் எந்த காமெடியனும் வாங்காத அளவுக்கு அதிகமான சம்பளம் வாங்கியவர்
இவராகத்தான் இருக்கக்கூடும்.
முன்னணி ஹீரோக்களுக்கு உள்ள சகல
மரியாதைகளையும் வடிவேலுக்கு கொடுத்து வந்தது சினிமா உலகம். இந்த
நிலையில்தான், விஜயகாந்துடனான பிரச்னை, அரசியல் பிரவேசம் என்று ட்ராக்
மாறிப்போய் ஒன்வேயில் சிக்கிக்கொண்டார் வடிவேலு.
ஆக, இரண்டு
வருடம் சினிமாவை விட்டு விலகியிருந்த அவர், தற்போது 'ஜெகஜால புஜபல
தெனாலிராமன்' என்ற படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்துள்ளார். இப்படத்தில்
தெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் என்ற இரண்டு கெட்டப்பில் நடிக்கிறார்
வடிவேலு. 'பட்டாபட்டி' படத்தை இயக்கிய யுவராஜ் இப் படத்தை இயக்குகிறார்.
(மேலும்)