இயக்குநர்
களஞ்சியத்தின் ஊர் சுற்றி புராணம் படத்தில் கதாநாயகியாக நடித்து வந்த
நடிகை அஞ்சலி திடிரென மாயமாகி இதுநாள் வரை அவர் அம்மா என்று அழைத்து வந்த
பாரதி தேவி தனது அம்மா அல்ல, சித்தி என்றும், வீட்டில் தனக்கு பாதுகாப்பு
இல்லை என்றும் பரபரப்பான தகவல்களை அஞ்சலி வெளியிட்டார்.
இதனால்,
ஊர் சுற்றி புராணம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அஞ்சலி நடிக்க
வராததால் தனது படப்பிடிப்பு பாதிப்பட்டிருப்பதாக டைரக்டர்கள்
சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் களஞ்சியம் புகார் செய்தார்.இந்த நிலையில், அஞ்சலி சில நாட்கள் ஐதராபாத்தில் தலைமறைவாக வாழ்ந்தார். பின்னர் அவர், புனேயில் நடந்த ஒரு தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
அங்கிருந்து சிங்கம்-2 படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடனம் ஆடுவதற்காக, தூத்துக்குடி வந்தார். அங்கு 2 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார். மேலும் பதிவினை படிக்க