நடிகை
அஞ்சலி கடந்த 8-ந்தேதி திடீரென்று மாயமானார். சித்தி பாரதிதேவி, டைரக்டர்
களஞ்சியம் ஆகியோர் தன்னை கொடுமைபடுத்துவதாகவும் எனவே வீட்டை விட்டு
வெளியேறி விட்டதாகவும் நிருபர்களிடம் தொடர்பு
கொண்டு பேசினார். சித்தி பாரதிதேவி இக்குற்றச்சாட்டை மறுத்தார்.
அஞ்சலியை
யாரோ கடத்தி வைத்து தனக்கு எதிராக பேசவைப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர்
அலுவலகத்தில் மனு கொடுத்தார். அஞ்சலியை தேடி கண்டுபிடிக்கும்படியும் அதில்
குறிப்பிட்டு இருந்தார்.
இதுபோல் அஞ்சலியின் அண்ணனும் ஐதராபாத் போலீசில் அஞ்சலியை காணவில்லை என்று புகார் செய்தார். சென்னை மற்றும் ஆந்திர
போலீசார் அவரை தேடினர்.
இதையடுத்து ஐதராபாத் போலீசில் திடீரென
ஆஜராகி தன்னை யாரும் கடத்த வில்லை என்று வாக்குமூலம் அளித்தார். மன
உளைச்சலால் மும்பையில் சில நாட்கள் ஓய்வு எடுக்க சென்று இருந்ததாக
கூறினார். தற்போது மீண்டும் படப்பிடிப்புகளில் பங்கேற்க துவங்கியுள்ளார்.
மேலும் பதிவினை படிக்க