http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Sunday, June 30, 2013

அன்னக்கொடியில் விஷமிகள். . மக்களே உஷார் - பாரதிராஜா

புதுமுகம் லட்சுமணன் - கார்த்திகா நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் 'அன்னக்கொடி'.

 
இந்தப்படம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் இயக்குநர் பாரதிராஜா எடுத்துள்ளதாக அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனியில் உள்ள பாராதிராஜா வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு படத்துக்கு தடை விதிக்கக் கோரியும் கோஷம் எழுப்பி வருகின்றனர்.


இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக இயக்குனர் பாரதிராஜா நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.  மேலும் பதிவினை படிக்க‌

பாரதிராஜாவை சாய்ச்சுபுட்ட - 'அன்னக்கொடி' விமர்சனம்.

நடிகர்கள்: லட்சுமணன், மனோஜ், கார்த்திகா.
இயக்கம்: பாரதிராஜா
இசை: ஜீவி பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : சாலை சகாதேவன்
தயாரிப்பு: மனோஜ் கிரியேஷன்ஸ்

கதைக்களம், திரைக்கதை, தொழில்நுட்பம் என்று தமிழ் சினிமா வேறு ஒரு பரிணாமத்தில் வளர்ந்துக்கொண்டிருக்க, இதையும் கொஞ்சம் பாருங்க என்று பாரதிராஜா, அவரோட பழைய பாணியில் இயக்கியிருக்கும் படம் தான் 'அன்னக்கொடி'.

என்ன தான் திரும்ப திரும்ப கிராமத்தை காட்டினாலும், பாரதிராஜா படங்களுக்கு என்று ஒரு தனித்துவம் இருக்கும் என்று, பெரும் எதிர்ப்பார்ப்புகளோடு திரையரங்குங்கு செல்லும் ரசிகர்களுக்கு, பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறார் பாரதிராஜா.

சரி பாராதிராஜவை வறுத்தெடுத்தது போதும் கதைக்கு வருவம்  மேலும் பதிவினை படிக்க‌

Saturday, June 29, 2013

ஐஸ்வர்யாவுக்கு நான் நல்ல கணவன் கிடையாது தனுஷ் வருத்தம்

தமிழில் மட்டுமே அசத்தி கொண்டிருந்த நடிகர் தனுஷ், இப்போது இந்தியிலும் தனது முதல்படமான ராஞ்சனா மூலம் எல்லோரையும் கவர்ந்துவிட்டார். சமீபத்தில் ரிலீஸான இப்படம் இந்தியில் சூப்பர்-டூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதனால் தனுஷ்க்கு இந்தியில் மவுசு கூடியுள்ளது.


அதுமட்டுமின்றி தனுஷ்க்கும்-சோனம் கபூருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி உருவாகி இருப்பதாக பாலிவுட் மீடியாக்கள் பாராட்டி வருகின்றன.  மேலும் பதிவினை படிக்க  மேலும் பதிவினை படிக்க‌

ஜாதியை இழிவுபடுத்துவதா? பாரதிராஜா வீடு முற்றுகை.

இயக்குநர் பாரதிராஜா 'அன்னக்கொடி' திரைப்படத்தில் தங்களது ஜாதியை இழிவு படுத்துவதாக கூறி அவரது வீட்டினை ஒரு பிரிவினர் முற்றுகையிட்டு தீவிர போராட்டத்தில் குதித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.



தமிழ் சினிமாவை புரட்டியெடுத்த படைப்பாளியும் மண்ணின் வாசனையை உலகுக்கு எடுத்துக்காட்டியவருமான பாரதிராஜா பல ஆண்டுகள் கழித்து இயக்கியுள்ள படம் 'அன்னக்கொடி'.   மேலும் பதிவினை படிக்க‌

கிரிக்கெட் சூதாட்ட‌ நாயகன் ஸ்ரீசாந்த் நடிக்கும் “பிக் பிக்சர்”.

கிரிக்கெட் சூதாட்டத்தின் பிரபல நாயகனாக கருதப்படும் ஸ்ரீசாந்த் புதிய படமொன்றில் நாயகனாக அவதாரம் எடுக்கவுள்ளார்.

கேரளாவை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சமீபத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டப் புகாரில் சிக்கி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய அவருடன் மேலும் 2 வீரர்களும் கைது செய்யப்பட்டனர். மேலும் பதிவினை படிக்க‌

கமலுடன் நடிக்க அதிக சம்பளம் கேட்டு காஜல் அடாவடி .

தற்போது கோலிவுட்டில் முண்ணனி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வாலின் அடாவடி தாங்க முடியவில்லையென புலம்பித் தவிக்கிறார்கள்  திரையுலகினர்.


அதாவது முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்க நடிகைகள் போட்டி போடுவதுண்டு. முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் போது சம்பளத்தை பற்றி கதாநாயகிகள் கவலைப் படுவதில்லை. மேலும் பதிவினை படிக்க‌

படுக்க வச்சு மிதிச்சாங்க - நடிகை பூர்ணா தந்த அதிர்ச்சி

வித்தகன், துரோகி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை பூர்ணா. தற்போது ‘படம் பேசும்‘ என்ற படத்தில் சக்தி ஜோடியாக நடிக்கிறார். 

ராகவா இயக்குகிறார்.  இதனை நாராயணபாபு, பூர்ணிமா, வாசன் எஸ்.எஸ். தயாரிக்கின்றனர்.


இதில் நடிப்பது பற்றி பிரஸ் மீட்டில் பூர்ணா கூறியதாவது: மேலும் பதிவினை படிக்க‌

நேரம் நாயகி கால்ஷீட் சொதப்பல்.. கடுப்பான ஏ.ஆர் முருகதாஸ்.

நேரம் படத்தில் நடித்த நஸ்ரியா நாசிமுக்கு கால்ஷீட்டுக்க்கு சரியா  நேரம் ஒதுக்கத்தெரியவில்லை இதனால் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கண்டித்துள்ளது.


'நேரம்‘ படத்தில் நடித்தவர் நஸ்ரியா நாசிம். தற்போது தனுஷ் ஜோடியாக 'நையாண்டி', ஆர்யா ஜோடியாக ‘ராஜா ராணி' படங்களில் நடிக்கிறார்.  மேலும் பதிவினை படிக்க‌

Friday, June 28, 2013

சில்கின் பாணியில் கவர்ச்சி - பிந்து அதிரடி

தமிழ் சினிமாவை மட்டுமல்ல இந்திய சினிமாவையே தனது கவர்ச்சி குளத்தில் நீந்த வைத்தவர் சில்க். இவர் தமிழில் ரஜினிகாந்த், கமல், பிரபு உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தார்.

இந்நிலையில் சில்க் ஒரு நாள் திடீர் என்று இறந்துவிட்டார். அவரது இறப்பு கொலையா, தற்கொலையா என்ற சர்ச்சையை  மேலும் பதிவினை படிக்க‌

கனடா ஈழத்தமிழர் நிகழ்வில் ஸ்ரேயா - புகைப்படங்களுடன்

நடிகை ஸ்ரேயா இப்போது சந்திரா, பவித்ரா என கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். சந்திரா படத்தில் இளவரசியாக அசத்தினாலும் பவித்ரா படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கிறார்.


அழகாக இருந்தாலும் சில படங்கள் மட்டுமே ஹிட் ஆகி தமிழில் சரியான வாய்ப்புகள் இன்றி இருக்கிறார் ஸ்ரேயா.  மேலும் பதிவினை படிக்க‌

உடற்கட்டு ஆண்களை திருமணம் செய்ய மாட்டேன்- கங்கனா ரணாவத்

கட்டுடல் ஆண்கள் எனக்கு பிடிக்காது, அவர்களை திருமணமும் செய்ய மாட்டேன் என கூறி சிக்ஸ்பேக் உடற்கட்டு ஆண்களுக்கு ஆப்படித்துள்ளார் நடிகர் ஜெயம் ரவியுடன் 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழுக்கு நன்கு பரிச்சயமான நடிகை  கங்கனா ரணாவத்.

 
இது தொடர்பாக அவர் கூறியதாவது:- மேலும் பதிவினை படிக்க‌

நடிகை சுஜிபாலா தாய் மீது இயக்குநர் சங்கத்தில் புகார்.

மதர் கிரீன்லேண்ட் மூவிமேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் பி.ரவிக்குமார் தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடிக்கும் படம் 'உண்மை'. 

இந்த படத்தில் சுஜிபாலா கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சண்டிகரில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால் சுஜிபாலா சூட்டிங் வர மறுத்துவிட்டார். இது தொடர்பாக டைரக்டர் பி.ரவிக்குமார் கூறியதாவது:- மேலும் பதிவினை படிக்க‌

ரகுவரனின் அட்வைஸால் மகா நடிகனான சூர்யா.

சூர்யா தனது நண்பர் விஜய் நடித்த நேருக்கு நேர் படத்தில் அறிமுகமானார். அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். அந்த படத்தில் வரும் எங்கெங்கே எங்கெங்கே என்ற பாடலை சூர்யா ஓடி, ஓடியே ஓட்டியிருப்பார்.


அதன் பிறகு ஒரு சில படங்களில் பாடல் காட்சி வந்தால் நடந்து, ஓடி நாட்களை கழித்தார். பின்னர் ஒரு வழியாக டான்ஸ் ஆடத் துவங்கினார். மேலும் நடிப்பிலும் கலக்கத் துவங்கினார். இந்நிலையில் சூர்யா தனது திரையுலக பயணம் குறித்து மனம் திறந்துள்ளார்.  மேலும் பதிவினை படிக்க‌

கவர்னர் தொடங்கிவைத்த - இளமை பயணம்.

மேஜிக் அண்டு லாஜிக் புரோடக்சன் ஹவுஸ் மற்றும் ஸ்ரீ சித்ரா மூவிஸ் இணைந்து தயாரிக்கும் படம் 'இளமை பயணம்'


இப்படத்தை பாரதி கணேஷ் இயக்குகிறார். வைரமுத்து பாடல்கள் எழுத ஏ.ஆர். ரேஹானா இசையமைக்கிறார்.


இப்படத்தில் ரோசன், மனாஷ், வினோத், ப்ரீத்தி, ஸ்வீட்டி ஆகியோர் அறிமுகம் ஆகிறார்கள்.  மேலும் பதிவினை படிக்க‌

துருவ நட்சத்திரம்' சூர்யா ஜோடி அமலா அல்ல சமந்தா!

நாயகிகள் த்ரிஷா, அமலாபாலை கழட்டி விட்டு துருவ‌ நட்சத்திரம் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தனது ஆஸ்தான நடிகை சமந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளாராம் கௌதம் மேனன்.

சூர்யாவும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும் இணையும் மூன்றாவது படம் துருவநட்சத்திரம்.மேலும் பதிவினை படிக்க‌

Thursday, June 27, 2013

சர்வதேச ஸ்கை டைவர்ஸ் கூட்டத்தில் - அருண் விஜய்.

சென்னை : சர்வதேச ஸ்கை டைவர்ஸ் கூட்டம் மலேசியாவில் நடந்துவருகிறது. இதில் நடிகர் அருண் விஜய் கலந்துகொண்டுள்ளார்.


விமானம் பறந்து கொண்டிருக்கும் போது அதிலிருந்து அந்தரத்தில் குதிக்கும், ஸ்கை டைவில் அருண் விஜய் பயிற்சி பெற்றுள்ளார். இதற்காக அமெரிக்காவில் உள்ள பாராசூட் அசோசியேஷனில் லைசென்ஸ் வாங்கியுள்ளார். மேலும் பதிவினை படிக்க‌

பிரியாணிக்கு முன் அழகு ராஜா கார்த்தியின் ஆசை - கடுப்பில் வெங்கட் பிரபு.

இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் 'பிரியாணி' இதில் கார்த்திக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார்.


அதேபோல் இயக்குநர் ராஜேசின் 'ஆல் இன் அழகு ராஜா' படத்திலும் நடித்துவருகிறார் கார்த்தி.  இதில் கார்த்திக்கு ஜோடியாக காஜல் அகர்வால நடித்துள்ளார்.  மேலும் பதிவினை படிக்க‌

நடிகை லீனாவுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு.

சென்னையிலுள்ள கனரா வங்கியில் போலி ஆவணங்களை காட்டி ரூ.18.5 கோடி பணத்தை மோசடி செய்த வழக்கில் நடிகை லீனா மரியா பால் கைது செய்யப்பட்டார். இந்த மோசடிக்கு காரணமான இருந்த சென்னையைச் சேர்ந்த இவரது காதலன்  சுதேஷ் சந்திரபோஸ் தலைமறைவாகிவிட்டார். இவரை போலீசார் தேடி வருகின்றனர்.



கைது செய்யப்பட்ட லீனா மரியா பால் போலீஸ்  விசாரணையில்,  மேலும் பதிவினை படிக்க‌

ஏ.ஆர்-கள் கலந்துகொள்ளும் இசைவெளியீட்டு விழா.

‘சில்லுன்னு ஒரு காதல்’ என்ற படத்தை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இயக்கும் புதிய படம் நெடுஞ்சாலை. இதனை பைன் போக்கஸ் படநிறுவனம் சார்பாக ஆஜூ மற்றும் சௌந்தர்ராஜன் தயாரிக்கின்றனர்.


 இப்படத்தில் ஆரி, சுவதா ஆகியோர் நடிக்கின்றனர். 'எங்கேயும் எப்போது' திரைப்படத்துக்கு இசையமைத்த இசையமைப்பளர் சத்யா இசையமைக்கிறார். மேலும் பதிவினை படிக்க‌

சசிகுமார் படத்துக்காக திருமணத்தை ஒத்தி வைத்த‌ நடிகை.

தமிழ் படத்தில் காதலன் பணியாற்றிய பிறகுதான் அவரை மணப்பேன் என்றார் மலையாள நடிகை அன் அகஸ்டின்.


பல்வேறு மலையாள படங்களில் நடித்திருப்பவர் நடிகை அன் அகஸ்டின். இவருக்கும் மலையாள பட ஒளிப்பதிவாளர் ஜோமன் டி.ஜானுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் திருமணம் செய்யாமல் காலம் கடத்தி வருகின்றனர்.    மேலும் பதிவினை படிக்க‌

ஜீவி பிரகாஷ் சைந்தவி திருமணம் - திரையுலகம் வாழ்த்து

கோலிவுட் திரையுலகம் புடை சூல  பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் - பின்னணிப் பாடகி சைந்தவிக்கும் இன்று காலை சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது.


சரியாக காலை 10.23 மணிக்கு மணமகன் ஜீ.வி.பிரகாஷ், மணமகள் சைந்தவிக்கு மேள-தாளங்கள் முழங்க முறைப்படி தாலி கட்டினார்.  மேலும் பதிவினை படிக்க‌

Wednesday, June 26, 2013

சிங்கம் 2 வுக்கு க்ளீன் 'யு' - 2400 திரயரங்குகளில் ரிலீஸ்.

ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் விரைவில் வெளி வரைருக்கும் படம் சிங்கம்-2 இதில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா - ஹன்சிகா நடித்துள்ளனர். 


விவேக்கும், சந்தானமும் காமெடியில் கலக்கியுள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையில் வெளியாகியுள்ள மேலும் பதிவினை படிக்க‌ 

அமிதாப் பச்சனை பொறாமைப்பட வைத்த தனுஷின் ராஞ்சனா.

த‌மிழ் படங்களில் முத்திரை பதித்த தனுஷ் முதன்முறையாக அறிமுகமாகி இருக்கும் பாலிவுட் படம்தான் ராஞ்சனா.


பிரபல இயக்குனர் ஆனந்த் ராய் இயக்கியுள்ள இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்திருக்கிறார். ஏ. ஆர். ரகுமான்                    இசையமைத்துள்ளார்.   ராஞ்சனா      திரைப்படம் கடந்த 21ம் தேதி இந்தியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


எடுத்த எடுப்பிலேயே தனுஷை தூக்கி வைத்துக் கொண்டாட ஆரம்பித்துள்ளன வட இந்திய மீடியாக்கள். பாலிவுட்டுக்குக் கிடைத்த மிகச்சிறந்த புது ஹீரோ என்று அவரைப் பாராட்டியுள்ளன.

இந்நிலையில் இந்தித் திரையுலகின் மூத்த நடிகரும், சூப்பர் ஸ்டாருமான அமிதாப் பச்சன் மேலும் பதிவினை படிக்க‌

விஷாலின் பாண்டிய நாட்டில் முக்கிய வேடத்தில் விக்ராந்.

விஜய்யின் தம்பி அசப்பில் விஜய் போலவே இருக்கும் விக்ராந்தின் கேரியர் மைனஸிலேயே இருக்கிறது. கடந்த சில மாதங்களாக (வருடங்களாக?) ஆளையே காணொம். இந்த நிலையில் விக்ராந்த் ஹீரோவாக நடித்திருக்கும் 'பிறவி' வெளிவர இருக்கிறது.

எல்லா நடிகர்களும் சில படங்களை அதி தீவிரமாக நம்புவார்கள். விக்ராந்துக்கு 'பிறவி' அப்படியோரு படம். அவரின் அண்ணந்தான் இயக்கியிருக்கிறார்.


பிறவியில் நடித்த நேரம் இன்னொரு கதவும் திறந்திருக்கிறது விக்ராந்துக்கு.  அதுதான் மேலும் பதிவினை படிக்க‌

மகளுக்கு சான்ஸ் கேட்ட ராதா - கைவிரித்த கவுதம்மேனன்.

துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யாவுடன் ஜோடியாக நடிக்க அமலாபால் த்ரிஷா இடையே பலத்த போர் மூண்டு தணிந்து வரும் நிலையில், என்னுடைய மகள் துளசி இதுல நடிச்சாத்தான் நல்லாயிருக்குமேன வாரிச்சுருட்டி மும்பையிலிருந்து கிளம்பியுள்ளார் மாஜி நடிகை ராதா.


சூர்யாவை வைத்து இயக்கும் 'துருவ நட்சத்திரம்' படத்தில் நாயகியை பள்ளி மாணவி கேரக்டரில் தான் நடிக்க வைக்கிறாராம் கவுதம் மேனன். மேலும் பதிவினை படிக்க‌

அமீர் படப்பிடிப்பில் இனம் தெரியாதவர்களால் கல்வீச்சு.

"மெளனம் பேசியதே"-வில் தொடங்கி "ஆதிபகவன்" படம் வரை தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் டைரக்டர் அமீர். இயக்குனராக மட்டுமல்லாமல் "யோகி" படத்தில் ஹீரோவாகவும், மிஸ்கினின், "யுத்தம் செய்" படத்தில் கன்னித்தீவு பொண்ணா... என்று பாட்டுக்கு நடனம் ஆடியும் அசத்தினார்.


டைரக்டர், பெப்சி சங்க தலைவர் என்று பிஸியாக இருக்கும் அமீர், யோகி படத்திற்கு பிறகு மீண்டும் ஹீரோவாக நடிக்கும் படம் "பேரன்பு கொண்ட பெரியோர்களே"  மேலும் பதிவினை படிக்க‌

இந்திராகாந்தி வேடத்தில் ஹாலிவுட் நடிகை.

இந்தியாவின் முன்னால் பிரதமர் இந்திராகாந்தியின் வாழ்கை வரலாறு விரைவில் திரைப்படமாக தயாராக உள்ளது. இந்தப் படத்தை நட்டிகுமார் இயக்க இருக்கிறார்.


இவர் ஏற்கெனவே கணேஷ் வெங்கட்ராம்வை வைத்து மேலும் பதிவினை படிக்க‌

பண மோசடி தயாரிப்பாளர் சித்திரை செல்வன் கைது.

சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் நடித்துள்ள படம் தலைவன். இப்படத்தின் தயாரிப்பாளராக சித்திரை செல்வன் உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக துணை நடிகர்களை அழைத்து வர சொல்லி பிரகாஷ் என்பவரிடம் சொல்லி இருந்தார்.

 
பிரகாஷ் சினிமாவில் துணை நடிகர்கள் ஏஜென்ட்டாக செயல்பட்டு வருகிறார். மேலும் பதிவினை படிக்க‌ 

மீண்டும் குழந்தை சாராவை இயக்கும் ஏ.எல் விஜய்.

தெய்வத்திருமகள் படத்தில் நடித்ததன் மூலம் எல்லோரையும் கவர்ந்தவர் குழந்தை நட்சத்திரம் சாரா. படத்தில் விக்ரம் மகளாக நடித்திருந்த அந்த சிறுமியின் நடிப்புத்திறமையையும், அழகான சிரிப்பையும் பாராட்டாதவர்களே இருக்க முடியாது. 


அந்த படத்திற்கு பிறகு தமிழில் சுந்தர்ராஜனின் 'நிலாச்சோறு' படத்தில் நடித்துள்ள சாரா அடுத்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.


அதாவது தற்போது தலைவா படத்தை முடித்து அடுத்தமேலும் பதிவினை படிக்க‌

பாடகரானார் நடிகர் சிவகார்த்திகேயன்.

எதிர்நீச்சல் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.


காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் இந்தப் படத்தை ராம் ஜாவ் இயக்குகிறார். இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களில் இயக்குனர் ராஜேஷின் உதவியாளராகப் பணியாற்றியவர்.


ராஜேஷ் இப்படத்திற்கு வசனங்களை எழுதிக் கொடுத்து இருக்கிறார். 'பஸ் ஸ்டாப்' மேலும் பதிவினை படிக்க‌

Tuesday, June 25, 2013

முருகாதாஸ் உதவி இயக்குநர்கள் இருவர் ஒன்றானால்.

தீனா முதல் கஜினி வரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தவர் ஏ.எம். சம்பத்குமார். இவர், ரமணா ஆர்ட்ஸ் என்ற புதிய நிறுவனம் மூலம் தயாரிப்பாளராக உயர்ந்துள்ளார்.

 

இவர் தயாரிக்கும் முதல் படத்துக்குத் தானே இயக்குனராக ஆகாமல் ஏ.ஆர். முருகதாஸின் இன்னொரு துணை இயக்குனரான அன்பு.ஜி என்பவரை இயக்குனராக அறிமுகம் செய்கிறார். அதற்குக் காரணம் கதை.  மேலும் பதிவினை படிக்க‌

எனது மனவலி அப்பா - அம்மா பிரிவு.. ஸ்ருதி உருக்கம்.

இந்திய சினிமாவில் தற்போது ஒரு கலக்கு கலக்கிவருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் பாலிவுட்டிலும் தெலுங்கிலுமே அதிக பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஐதராபாத்தில் ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:-
மாடலிங், இசை, சினிமா மூன்றும் எனக்கு பிடித்தவை. என்னைப் பற்றிய எல்லா விஷயகளையும் அப்பா கமல், அம்மா சரிகா, தங்கை அக்ஷரா ஆகியோருடன் பகிர்ந்து கொள்கிறேன். மேலும் பதிவைனை படிக்க‌

இந்தி சாதனைக்கு தமன்னா பாராட்டு - கைப்புள்ள தனுஷ் உஷாரய்யா உஷாரு.

தனுஷ் இந்தியில் நடித்த 'ராஞ்சனா' படம் ரிலீசாகி வசூலை வாரிக்குவித்து வெற்றிகரமாக ஓடுகிறது.  இதற்கு நடிகை தமன்னா மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

 
சினிமா எல்லைகளை கடந்து விட்டது. முன்பெல்லாம் தென் இந்திய நடிகர், நடிகைகள் இந்தியில் பிரபலமாவது கடினம். ஹேமமாலினி, ஸ்ரீதேவி என குறிப்பிட்ட சிலரே அங்கு ஜெயித்தனர். ஆனால் இப்போது எல்லோராலும் இந்திப் படங்களில் நடிக்க முடிகிறது.  மேலும் பதிவினை படிக்க‌

சீண்டிய‌ விக்ரம் பிரபு - டென்ஷனான‌ லிங்குசாமி.

தான் அறிமுகமான 'கும்கி'யிலே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் விக்ரம் பிரபு. பிரபுவின் வாரிசான இவர் தேடிச் சென்றே இந்த வாய்ப்பை பெற்றிருந்தார்.


 
முதல் படமே பெரிய அளவில் பேசப்பட்டதால் விக்ரம் பிரபுவை தேடி வாய்ப்புகள் வந்து அமைகின்றன தற்போது 'இவன் வேற மாதிரி', 'கிகரம் தொடு' போன்ற படங்களில் நடித்து வரும் விக்ரம்பிரபு அடுத்து 'அரிமா நம்பி' என்ற புதிய படத்தில் நடித்துவருகிறார். மேலும் பதிவினை படிக்க‌

ஆத்திச்சூடியும் கையுமாக திரியும் அஜீத்குமார்.

சென்னை: நம்ம தல அஜீத் குமார் நல்ல விசயங்கள் எங்கு நடந்தாலும்.. அதை பாராட்டுவதோடு மட்டுமல்லாமல் தானும் ஒருவராக களத்தில் இறங்கி கலக்குவார். 


அது மட்டுமில்லாமல் தன் அறிவு பசியை தீர்த்துகொள்வதற்காக பலபுத்தகங்களை படிப்பதை வழக்கமாக கொண்டிருப்பவர் அஜீத் குமார்.


நல்ல சமூக சேவகனாகவும், நடிகனாகவும் எல்லோரும் போற்றும் வகையில் வளர்ந்து நிற்கும் அஜீத் குமாருக்கு மேலும் பதிவினை படிக்க‌

டி.ஆர் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சனாகான் ஓட்டம்.

பவர் ஸ்டார் சீனிவாசனை வைத்து 'நான் சரக்கு நீ ஊறுகாய்' என்ற பெயரில் புதிய படமொன்றை எடுத்து வந்த ராம.நாராயணன் பின், சமூக நலன் கருதி படத்தின் பெயரை முண்ணனி இரண்டு நடிகர்களின் பெயரில் மாற்றினார் அதுதான் 'ஆர்யா சூர்யா'.

ராம.நாராணின் 'ஆர்யா சூர்யா'வில் நடித்த  பவர் ஸ்டார் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு இப்போது சிறையில் உள்ளதால் பவருக்கு பீஸ் கட்டை பிடுங்கப்பட்டு  அவருக்குப் பதில் மற்றொரு டெரர் நடிகர் டி.ரஜேந்தர் நடித்துவருகிறார். மேலும் பதிவினை படிக்க‌

வசூலில் சாதனை படைக்கும் ராஞ்சனா - உச்சகட்ட மகிழ்ச்சியில் தனுஷ்.

த‌மிழ் படங்களில் முத்திரை பதித்த தனுஷ் முதன்முறையாக அறிமுகமாகி இருக்கும் பாலிவுட் படம்தான் ராஞ்சனா.


பிரபல இயக்குனர் ஆனந்த் ராய் இயக்கியுள்ள இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ராஞ்சனா திரைப்படம் கடந்த 21ம் தேதி இந்தியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

எடுத்த எடுப்பிலேயே தனுஷை தூக்கி வைத்துக் கொண்டாட ஆரம்பித்துள்ளன வட இந்திய மீடியாக்கள் மேலும் பதிவினை படிக்க‌

Monday, June 24, 2013

சுறா மீனுடன் சண்டை போடும் கோச்சடையான் ரஜினி.

இந்தியத் திரையுலகின் முதல் மோஷன் கேப்சரிங் படமாக தயாராகி வரும் கோச்சடையான் படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே முதன்முறையாக நடிக்கிறார். இதனை ரஜினி காந்த் மகள் சௌந்தர்யா இயக்கியுள்ளார்.


ர‌ஜினி படங்கள் என்றால் எதிர்பார்ப்புக்கு சொல்லவே வேண்டாம். அந்த மாதிரி ஒரு எதிர்பார்ப்பு கோச்சடையான் படத்துக்கு ஆரம்பித்ததிலிருந்தே இருந்து வருகிறது. மேலும் பதிவினை படிக்க‌

மீண்டும் விஜய்யுடன் இணையும் ஜீவா.

ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் ஜில்லாவை தயாரிக்கிறது. நடிப்பில் கோட்டைவிட்ட சௌத்ரியின் மூத்த மகன் ஜித்தன் ரமேஷ் தயாரிப்பு தரப்பை கவனித்துக் கொள்கிறார். 


தயாரிப்பாளராக புது அவதாரம் எடுப்பதற்கான முன்னோட்டம் என்கிறார்கள். மேலும் பதிவினை படிக்க‌

விஷாலை கட்டிப்பிடித்து அழுத இயக்குநர் -விழாவில் உருக்கம்.

விஷால் நடிக்கும் புதிய படம் 'பட்டத்து யானை'. இதில் நாயகியாக அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அறிமுகமாகிறார். பூபதிபாண்டியன் இயக்குகிறார். மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

நடிகர் ஆர்யா பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட்டார். .
விழாவில் ஆர்யா பேசும் போது,
புரட்சித் தளபதி, அண்ணன், கேப்டன் விஷாலும் டைரக்டர் பூபதிபாண்டியனும் நல்ல காம்பினேஷன் படம் வெற்றி பெறும் என்றார்.


டைரக்டர் பூபதிபாண்டியன் பேசும் போது, மேலும் பதிவினை படிக்க‌

ஸ்ருதியின் இரண்டாவது திருமண வாழ்வில் சூறாவளி.


1990-ம்  ஆண்டு கன்னட திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி. தமிழில் "கல்கி"  உள்பட பல்வேறு படங்களில் நடித்த சுருதி, கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். முன்னணி நட்சத்திரமாக இருந்தபோதே கன்னட திரைப்பட இயக்குனர்  எஸ்.மகேந்தரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் கவுரி என்ற மகள் உள்ளார்.


அதன்பிறகு  மகேந்தருக்கும், சுருதிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை  தொடர்ந்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
கடந்த ஜூன் 6ம் தேதி ஸ்ருதி, டைரக்டரும், பத்திரிகையாளருமான சந்திரசூட்டை கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் திடீரென 2-வது திருமணம் செய்து மேலும் பதிவினை படிக்க‌

'ஆர்யா சூர்யா'வுக்காக பவர் ஸ்டார் கரடி வேடம்.

டைட்டிலை படித்துவிட்டு நடிகர்க‌ள் ஆர்யா, சூர்யா திரைப்படத்தில் பவர் ஸ்டார் கரடியாக மாறுகிறார் என்று தப்பா நினைத்துவிடாதீர்கள்.


கண்ணா லட்டு தின்ன ஆசையா எனும் படத்தில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர் பவர் ஸ்டார். இந்தப் படத்தின் வெற்றி பவருக்கு மேலும் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்று தந்தன.


ஆனால் அது ரொம்ப நாட்கள் நிலைக்கவில்லை. எவ்வளவு வேகமாக பிரபலம் அடைந்தாரோ அதே வேகத்தில் காணாமலும்  மேலும் பதிவினை படிக்க‌ 

சித்தார்த் அதிரடி பேச்சு -சமந்தாவின் கதி அதோ கதிதான்.

ரசிகர்களின் சாக்லேட் பாய் சித்தார்,  சுந்தர்.சி இயக்கத்தில், அவர் நடித்த "தீயா வேலை செய்யணும் குமாரு" படம் ரிலீஸாகி இருவாரத்தில் தமிழகத்தில் 10கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இதனால் பெரும் சந்தோஷத்தில் மிதக்கும் சித்தார்த் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து சித்தார்த் பேசியதாவது:
“ரொம்ப நாளா பசில இருந்த ஒருத்தனுக்கு, கன்னா பின்னான்னு வடை,பாயசம் விருந்து கொடுத்தால் மேலும் பதிவினை படிக்க‌

Sunday, June 23, 2013

மோகன்லாலின் அடுத்த தமிழ் படம் 'வெற்றி மாறன்'

நேரடி தமிழ்ப் படங்களில் நடிப்பதை சமீபமாக பெரிதும் விரும்புகிறார் மோகன்லால். மலையாளத்தில் முன்னணி இயக்குநர்கள் பலரும் மோகன்லாலின் கால்ஷீட்டுக்கு காத்திருக்கையில், இந்த வருடம் முழுவதும் நேரடி தமிழ்ப் படங்களில் நடிப்பதற்கான திட்டத்தில் இருக்கிறார்.


அந்த வகையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மேலும் பதிவினை படிக்க‌

 

Copyright @ 2013 எமது ஈழம் .