வீட்டை விட்டு ஓடி பரபரப்பை ஏற்படுத்திய
அஞ்சலி பின்னர் ஐதராபாத் போலீசில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
தற்போது
அங்கேயே முகாமிட்டு தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
அஞ்சலி ஐதராபாத்தில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
கேள்வி: வீட்டை விட்டு ஓடி பரபரப்பை ஏற்படுத்தி வீட்டீர்களே?
பதில்:-
எனது உறவினர்களால் வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அதை ஒரு துரதிர்ஷ்டமாக நினைக்கிறேன். என் வாழ்க்கையில் நடந்த கெட்டகனவாக
அதை மறந்து ரசிகர்களும் அதை மறக்க வேண்டுகிறேன்.
கே:- உங்களைப் பற்றி வதந்திகள் பரவுகிறதே?
ப:-
என்னைப் பற்றி நிறைய
கிசுகிசுக்கள் வருகின்றன. அது ஏன் என்று புரியவில்லை. அதற்காக
ஆவேசப்பட்டுக் கொண்டு இருக்கமுடியாது. ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில்
விட்டுவிட வேண்டும். அதையே நினைத்து அழுது கொண்டு இருக்கமாட்டேன், அப்படி
இருந்தால் வேறு வேலைகள் செய்ய முடியாது.
கே:- உங்களுக்கு கணவராக வருபவர் எப்படி இருக்க வேண்டும்?