http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Thursday, July 11, 2013

மீண்டும் இயக்குநர் விஜய்யுடன் இணையும் ஆர்யா

ஏ.எல் விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் திரைப்படத்தில் அறிமுகமான குழந்தை நட்சத்திரம் சாரா மீண்டும் ஏ.எல் விஜய் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

தற்போது தலைவா படத்தை முடித்து அடுத்த படத்திற்கு தயாராகி வரும் டைரக்டர் விஜய் இயக்கும் படத்தில் தான் சாரா நடிக்க இருக்கிறார்.  மேலும் பதிவினை படிக்க‌

தணிக்கை குழு பாராட்டுடன் யு பெற்ற 'உ'

அறிமுக இயக்குனர் ஆஷிக் தயாரித்து, இயக்கியுள்ள படம் உ. இப்படத்தில் ஹிரோவாக தம்பி ராமையா நடிக்கிறார்.

இவருடன் சூப்பர் சிங்கர் ஆஜீத், ஸ்மைல் செல்வா, மதன்கோபால், சத்யா கார்த்திக், தீபராஜ், வருண், நேகா, காளி, சக்கரவர்த்தி செல்வன், மேலும் பதிவினை படிக்க‌

தேசத்தலைவர்களுக்கு நிகராக விஜய்... தலைவா இயக்குநரின் சதி.

இயக்குநர் விஜய் இயக்க‌த்தில் ந‌டிகர் விஜய் நடித்திருக்கும் படம் 'தலைவா' இதில் விஜய்க்கு ஜோடியாக அமலாபல் நடித்துள்ளார்.முதலில் இந்தப் படத்தை விஜய் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி வெளியிட திட்டமிட்டனர். ஆனால் பட வேலைகள் முடியாத காரணத்தால் பிறந்த நாளன்று ஆடியோவை மட்டும் வெளியிட்டனர்.


தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் எல்லாம் முடிவடைந்த நிலையில், பட வெளியீட்டு வேலைகளில் படு பிசியாக இயங்கி வருகிறது ‘தலைவா’ படக் குழு.


இந்நிலையில் தலைவா படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமயத்தில் ஒரு லேசர் மேலும் பதிவினை படிக்க‌

ஆண்கள், பெண்களுக்கு தலை வழுக்கை – மீண்டும் முடி வளர என்ன செய்யலாம்..?

நம் உடம்பில் ஐந்து மில்லியன் முடிகள் உள்ளன. தலையில் மட்டும் எண்பதாயிரம் முதல் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் முடிகள் உள்ளன. புரோட்டின் சத்தில் உள்ள கேரட்டின் என்கிற மூலப்பொருள்தான் முடிகள் வளர்வதற்குக் காரணமாக இருக்கிறது. 


புரோட்டின் சத்து குறைந்தால், முடி அதிகமாக உதிரும். நம் உடம்பில் எத்தனை முடி இருக்கிறதோ, அவற்றுக்கான அடித்தண்டு (follicies), தாயின் வயிற்றில் இருக்கிற போதே தோன்றி விடுகிறது. பிறப்பிற்குப்பின் புதிய முடி வளர்வதற்கானஅடித்தண்டு எதுவும் தோன்றுவதில்லை.

வழுக்கை பரம்பரையாக ஏற்படுவது என்பது தவறானகருத்து. இதற்கு ஐம்பது சதவிகித வாய்ப்புகளே உண்டு. தலையில் ஏற்படும் பொடுகினாலும் தலைமுடி பலமிழந்து போகலாம்.

மனஉளைச்சல் காரணமாகவும் தலைமுடி சரமாரியாக விழலாம். மஞ்சள் காமாலை, மலேரியா,டைபாயிட் போன்ற நோய்கள்வந்தாலும் தலைமுடி உதிரும்.

சிகரெட் பிடிப்பதும், தலைமுடி உதிர்வதற்கு ஒரு முக்கியமான காரணம். கைகால் வலிப்பு நோய்க்கான மருந்துகளைச் சாப்பிடும்போது, உயர் ரத்த அழுத்தம் தொடர்பானமாத்திரைகளைச் சாப்பிடும்போது, சில வகையான நோய் எதிர்ப்புச் சக்தி தரும் மாத்திரைகளை சாப்பிடும்போதும் தலைமுடி கொட்ட ஆரம்பிக்கும்.

பெண்களின் உடம்பில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால்தான் தலைமுடி நிறைய கொட்டும்வாய்ப்பு உண்டு. பெண்கள் பூப்படைந்தவுடன், அதாவது 12 முதல் 14 வயதுக்குள் நிறைய தலைமுடி இழக்கலாம்.

பிரசவம் முடிந்த சில மாதங்களுக்குள் நிறைய தலைமுடி கொட்டலாம். நாற்பத்தைந்து வயதில் மாதவிடாய் நிற்கிறபோதும் தலைமுடி உதிரலாம்.
ஊட்டச்சத்து குறைவாக இருக்கும்போது, முடி உதிர்கிறது. உதாரணமாக, நம் ரத்தத்தில் இரும்புச் சத்து குறைந்தால், முடி அதிக அளவில் உதிரும். பெண்களுக்கு ஹேமோகுளோபின் எண்ணிக்கை பன்னிரண்டோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்க வேண்டும்.


தலைமுடி மீண்டும் வளர..........

* வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

* வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒருவாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

* வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

* இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

* முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

* காய்ந்த நெல்லிக்காயைபவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

* தலை முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

* செம்பட்டை முடி நிறம் மாற மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

* நரை போக்க தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

* முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

* முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

* காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

* சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

* புழுவெட்டு மறைய நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையு

சித்தார்த் வில்லன் விஜய் சேதுபதி.

பீட்சா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் புதிய படம் 'ஜிகர்தண்டா' இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். 


பைவ் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.மேலும் பதிவினை படிக்க‌

ஞானவேல்ராஜா ஏற்படுத்திய தீ... சூர்யா - கார்த்தி மோதல்.

அடடா தமிழ் நாட்டு சிங்கம் - சிறுத்தைகள் மோதலால் கோலிவூட்டே பரபரத்துக்கிடக்கிறது. அது தாணுங்க‌ முன்னணி நடிகர்களான சூர்யா, கார்த்தி இருவரும் அண்ணன் - தம்பி என்பது ஊரறிந்த விஷயம். இருவருமே சினிமாவில் கொடிகட்டிப் பறந்தாலும், இருவருக்கும் சண்டை, சச்சரவு ஏற்பட்டது கிடையாது.

 
இருவருமே தனக்கென தனி பாதையை ஏற்படுத்திக் கொண்டு அதன் வழியில் பயணித்து வருகின்றனர். ஆனால், யார் கண்பட்டதோ தெரியவில்லை. சமீப காலமாக இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டிருப்பதாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில் உள்ளவர்கள். மேலும் பதிவினை படிக்க‌

 

Copyright @ 2013 எமது ஈழம் .