http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Friday, April 12, 2013

கோச்சடையான் ரஜினிக்கு ஜோடி ஷோபனாவாம் இயக்குநர் சௌந்தர்யா பேட்டி!

ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘கோச்சடையான்‘. இப்படத்தை ரஜினியின் 2வது மகள் சவுந்தர்யா இயக்கி உள்ளார். இதன் ஷூட்டிங் நடந்து முடிந்தது. 3டியில் புதிய தொழில் நுட்பத்தில் இப்படம் உருவாகி இருக்கிறது.


கடந்தவாரம் இப்படத்தின் டப்பிங் பணியில் பங்கேற்ற ரஜினிகாந்த் தான் நடித்த காட்சிகளின் முதல்பாதிவரையான டப்பிங்கை ஒரே நாளில் பேசி முடித்தார். வரும் மே மாதம் 15ம் தேதி முதல் 26ம் தேதிவரை கேன்ஸ் பட விழா நடக்க உள்ளது. அந்த விழாவில் ‘கோச்சடையான்‘ படத்தின் டிரைலர் வெளியிடப்படுகிறது. மேலும் பதிவினை படிக்க...

தமிழில் ஸ்ரீதேவி ஆசை நாயகன்!

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீதேவி கலந்து கொண்டார். பிரகாஷ் ராஜ் நடத்தும் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு முடிந்த பிறகு கிளம்பிய ஸ்ரீதேவியிடம் தமிழ் ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறுமாறு நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி குழுவினர் கேட்டுக் கொண்டனர்.

அப்போது ரசிகர்களிடம் பேசிய‌ ஸ்ரீதேவி கூறீயதாவது:...மேலும் பதிவினை படிக்க க்ளிக் பண்ணவும்!





வாவ்... பிரபுதேவாவை சூடேத்தும் நயன்தாரா!

ஏன்டா இந்த அழகு மயிலை மிஸ் பண்ணிடோமே என்று.. பிரபுதேவாவை வருத்தப்பட வைப்பதற்காகவே நயன் படு பியூட்டியான சாறியில் கொஞ்சம் தூக்கலாக‌ நந்தி விருது வாங்க வந்தாராம்.  ஆனால் பிரதேவாவை கடுப்பேத்த வந்த நயனின் அழகை பார்த்த ரசிகர்கள் வாவ்.. 'அழகுன்னா இப்படி ஒரு அழகை இது வரை பார்த்ததில்லை' என்று மகிழச்சியான ஆராவாரம் செய்தார்களாம்.. 
Beautiful Nayanthara Saree Stills - Image 14 of 40

Beautiful Nayanthara Saree Stills - Image 2 of 40
மேலும் நயனின் பியூட்டியையும், அமிதாப்பச்சானையும் பார்த்து ரசிக்க க்ளிக் பண்ணவும்..

நடிகை அஞ்சலி போலீசில் ஆஜர்!

தலைமறைவாக இருந்த நடிகை அஞ்சலி, நேற்று இரவு, ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானார்.
சென்னையில், தன் சித்தி குடும்பத்தினருடன் வசித்து வந்த நடிகை அஞ்சலி, சில நாட்களுக்கு முன் திடீரென மாயமானார். அவர் எங்கிருக்கிறார் என தெரியாமல், குடும்பத்தினரும், சினிமா தயாரிப்பாளர்களும் கவலை கொண்டனர்.
நடிகை அஞ்சலி நிலை குறித்து, ஐதராபாத்தில் இருக்கும், அவரது அண்ணன் ரவிசங்கர், நேற்று மதியம் தெரிவித்ததாவது:
அஞ்சலி விவகாரத்தில், எங்கள் குடும்பத்தினருடன் சுமுகமான நிலை ஏற்பட்டுள்ளது. சித்தி பாரதி தேவி, இயக்குனர் களஞ்சியத்துடன் இருக்கும் பிரச்னைகள், சுமுகமாக பேசி முடிக்கப்பட்டால், அஞ்சலியின் பிரச்னை முடிவிற்கு வரும்.சித்தி பாரதி தேவி, சென்னை ஐகோர்ட்டில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததால், அஞ்சலி கடும் கோபத்தில் இருக்கிறார்.
ஐதராபாத் கமிஷனர் அலுவலகத்திற்கு, வருவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினம், என்னோடு பேசிய போது, இது குறித்து ஏதும் பேசவில்லை. அவர் எங்கிருக்கிறார் என, எனக்கு தெரியாது.
அவர், இன்று, ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வரலாம் என எதிர்பார்க்கிறேன்.அஞ்சலியின் மொபைல் போன், "சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது. இதனால், அவராக என்னுடன் பேசினால் தான், உண்டு. அது வரை, அஞ்சலி குறித்து, வேறு எதுவும் பேசுவதற்கில்லை.
இவ்வாறு, ரவிசங்கர் கூறினார்.
சித்தி பாரதிதேவி, ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளதால்,
தமிழக போலீசாரின் பிடியில் சிக்குவதற்கு முன்பாக, ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு, அஞ்சலி வரலாம் என, நேற்று மாலை தகவல் வெளியானது.
அதன் படி,.. மேலும் பதிவினை படிக்க க்ளிக் பண்ணவும்

சிறந்த நடிகையாக தேர்வான நயன்தாரவுக்கு அமிதாப் வழங்கிய நந்தி விருது!

ஆந்திர திரையுலகில் ஆந்திர அரசின் நந்தி விருதுகள் உயரிய விருதாக கருதப்படுகிறது.

2011-ம் ஆண்டுக்கான ஆந்திர அரசின் நந்தி விருதுகள் ஐதராபாத்தில் நேற்று இரவு வழங்கப்பட்டன. ஆந்திர முதல்- மந்திரி கிரண்குமார் ரெட்டி, இந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோர் பங்கேற்று விருதுகளை வழங்கினார்கள்.
 
சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவுக்கு கிடைத்தது. ஸ்ரீராமராஜ்ஜியம் என்ற தெலுங்கு படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இவ்விருது அவருக்கு கிடைத்தது.  இதனை.. மேலும் பதிவினை படிக்க க்ளிக் பண்ணவும்!

கிரிகேட் வீரர் கெவின் பீட்டர்சன்னிடம் மண்டியிட்ட நடிகை ஹன்சிகா!


Actress Hansika And Kevin Pietersen Latest Photos - Image 2 of 2

நம் உள்ளூர் சினிமா ரசிகர்கள் நடிகைகளை நேரில் பார்த்து விட்டால் வழிவதும், அருகில் நின்று போட்டோ எடுத்துக் கொள்வதும் எத்தனை வாடிக்கையோ அதைவிடக் கூத்து அந்த நடிகைகள் விளையாட்டு வீரர்களிடம் க்ளீன் போல்டு ஆவது..!
 
அப்படித்தான் நடந்தது அந்த நிகழ்ச்சி. தீயா வேலை செய்யணும் குமாரு; படத்தின் பாடல் காட்சிகளுக்காக ஜப்பான் செல்ல ஏர்போர்ட் சென்ற ஹன்சிகா அங்கே உட்கார்ந்திருந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன்னைப் பார்த்ததும் உச்சி குளிர்ந்து ஓடிப் போய் வழிய ஆரம்பித்து ... மேலும் பதிவைனை படிப்பதற்கும் படங்களை பார்ப்பதற்கும் க்ளீக் பண்ணவும்!

ந‌டிகை ரீமா கல்லிங்கல் - இயக்குநர் ஆஷிக் அபு ரகசிய திருமணம்!

தமிழில் யுவன் யுவதி படத்தின் மூலம் பரத் ஜோடியாக நடித்த பிரபல மலையாள நடிகை ரீமாகல்லிங்கலுக்கும், மலையாள பட இயக்குனர் ஆஷிக் அபுவுக்கும் ரகசிய திருமணம் நடந்துள்ளதாக மலையாள பட உலகில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.


ஆஷிக் அபு ஏற்கனவே ரீமா கல்லிங்கலை கதாநாயகியாக வைத்து '22 பிமேல் கோட்டயம்' என்ற படத்தை இயக்கினார். இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ரீமாகல்லிங்கலுக்கு மேலும் பதிவைனை படிக்க‌

அவர் படத்துல நடிச்சவங்க ரொம்ப பேரு பிச்சைக்காரனா திரியுறாங்க.. பாலாவை கிண்டலடித்த‌ - விவேக்!

தமிழ் சினிமாவில் காமெடியர்கள் படுத்தும் பாடு பெரிய பாடு ஏனெனில் தாம் நடிக்கும் படத்தில் காமெடியென்னும் பெயரில் தங்களுக்கு பிடிக்காத‌ சினிமா பிரபலங்களை அறுத்து தள்ளிவிடுவார்கள்.

காமெடியன்களில் குறிப்பாக விவேக் தான் இப்படியான மோசமான காமெடிகளை கொடுப்பவர். சமீபத்தில் கூட நடிகர் திலகம் சிவாஜி கணேசனை கிண்டலடித்து நடித்ததால் பலரிடம் அவப்பெயர் சம்பாதித்துகொண்டார்.

இந்நிலையில் மீண்டும் ஒரு பிரபல இயக்குநரை அவரின் சம்மத்துடனே கிண்டலடித்துள்ளார் விவேக். ஒரு படத்தில் கருணாஸ், பிதாமகன் கெட்டப்பில் வந்து பீதியளித்ததை ரசிகர்கள் அறிவார்கள்.

அதே போல் நடிகர் விவேக்.. மேலும் செய்திகளை படிக்க க்ளிக் பண்ணவும்!

இயக்குநர் ஷங்கருடன் இணையும் தனுஷ்!

கொலைவெறி மூலம் உலக அளவில் புகழின் உச்சிக்குபோன நடிகர் தனுஷ் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் நடிக்கப் போகிறாராம்.

இந்திய அளவில் பல பிரமாண்டமான‌ படங்களை தந்த‌ ஷங்கர் இதுவரை அர்ஜூன், கமல், விக்ரம், பிரசாந்த் ஆகியோர வைத்து  இயக்கியுள்ளார்.

பாய்ஸ் படத்தில் சித்தார்த், பரத் என அறிமுக நடிகர்களை நடிக்க வைத்தார். அதற்குப்பின்னர் ரஜினியை வைத்து இரண்டு படம் இயக்கிய ஷங்கர், ‘ஐ' படம் மூலம் விக்ரமுடன் இணைந்தார். தற்போது தன்னுடைய அடுத்த படத்திற்கு தனுஷை புக் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பதிவினை படிக்க க்ளிக் பண்ணவும்

 

Copyright @ 2013 எமது ஈழம் .