http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Friday, April 12, 2013

நடிகை அஞ்சலி போலீசில் ஆஜர்!

தலைமறைவாக இருந்த நடிகை அஞ்சலி, நேற்று இரவு, ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானார்.
சென்னையில், தன் சித்தி குடும்பத்தினருடன் வசித்து வந்த நடிகை அஞ்சலி, சில நாட்களுக்கு முன் திடீரென மாயமானார். அவர் எங்கிருக்கிறார் என தெரியாமல், குடும்பத்தினரும், சினிமா தயாரிப்பாளர்களும் கவலை கொண்டனர்.
நடிகை அஞ்சலி நிலை குறித்து, ஐதராபாத்தில் இருக்கும், அவரது அண்ணன் ரவிசங்கர், நேற்று மதியம் தெரிவித்ததாவது:
அஞ்சலி விவகாரத்தில், எங்கள் குடும்பத்தினருடன் சுமுகமான நிலை ஏற்பட்டுள்ளது. சித்தி பாரதி தேவி, இயக்குனர் களஞ்சியத்துடன் இருக்கும் பிரச்னைகள், சுமுகமாக பேசி முடிக்கப்பட்டால், அஞ்சலியின் பிரச்னை முடிவிற்கு வரும்.சித்தி பாரதி தேவி, சென்னை ஐகோர்ட்டில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததால், அஞ்சலி கடும் கோபத்தில் இருக்கிறார்.
ஐதராபாத் கமிஷனர் அலுவலகத்திற்கு, வருவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினம், என்னோடு பேசிய போது, இது குறித்து ஏதும் பேசவில்லை. அவர் எங்கிருக்கிறார் என, எனக்கு தெரியாது.
அவர், இன்று, ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வரலாம் என எதிர்பார்க்கிறேன்.அஞ்சலியின் மொபைல் போன், "சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது. இதனால், அவராக என்னுடன் பேசினால் தான், உண்டு. அது வரை, அஞ்சலி குறித்து, வேறு எதுவும் பேசுவதற்கில்லை.
இவ்வாறு, ரவிசங்கர் கூறினார்.
சித்தி பாரதிதேவி, ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளதால்,
தமிழக போலீசாரின் பிடியில் சிக்குவதற்கு முன்பாக, ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு, அஞ்சலி வரலாம் என, நேற்று மாலை தகவல் வெளியானது.
அதன் படி,.. மேலும் பதிவினை படிக்க க்ளிக் பண்ணவும்

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .