http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Wednesday, April 10, 2013

பஞ்சாபை பந்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ்!

சென்னை: ஐபிஎல்-6 போட்டிகளில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த பஞ்சாப் 19.5 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 17.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 139 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

மொஹாலியில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை அணியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பென் லாஃப்லினுக்குப் பதிலாக தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் சேர்க்கப்பட்டார்.

டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி பீல்டிங்கைத் தேர்வு செய்தார். சென்னையின் சூப்பரான பந்துவீச்சால் 138 ரன்களுக்கு பஞ்சாப் சுருண்டது.

இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்யக் களம் இறங்கியது. துவக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய மைக்கேல் ஹஸி, முரளி விஜய் ஜோடி மிகச் சிறப்பாக விளையாடியது. மைக்கேல் ஹஸி 54 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார். இதில் 2 சிக்ஸர்களும் 11 பவுண்டரிகளும் அடங்கும். விஜய் 50 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதில் 1 சிக்ஸர் 3 பவுண்டரிகள் அடங்கும்.

இறுதியில் 17.2 ஓவர்களில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 139 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .