சிம்பு-ஹன்சிகா இருவரும் காதலிப்பதாக
சமீபத்தில் செய்திகள் வெளியானது. அதில், அடுத்த ஆண்டு திருமணம் செய்து
கொள்ள சிம்பு தயாராகி விட்டதாக சிம்பு சொன்னதாகவும், இன்னும் 5
ஆண்டுகளுக்குப்பிறகு திருமணம் செய்து கொள்வதாக ஹன்சிகா கூறியது போலவும்
கூறப்பட்டது. ஆனால், அந்த செய்தி எப்படி உருமாற்றப்பட்டது என்று
இராம.நாராயணன் இயக்கியுள்ள ஆர்யா சூர்யா படத்தின் ஆடியோ விழாவின்போது
டி.ராஜேந்தர் தெளிவுபடுத்தினார்.
நான் ஒருதலைராகம் படத்தை இயக்கியபோதே பத்திரிகையாளராக இருந்தார் ஒரு சீனியர்மேன். அவர் ஒருநாள் என்னை போனில் தொடர்பு கொண்டதும் பேட்டி கொடுத்தேன். அப்போது ஒரு கேள்வியாக, சிம்புவுக்கு எப்போது திருமணம் என்று கேட்டார். அதற்கு, ‘தங்கை தமிழ் இலக்கியாவுக்கு திருமணம் முடிந்த பிறகுதான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று என் மகன் சொல்லிவிட்டான்’ என்று பதில் கொடுத்தேன். (மேலும்)
0 comments:
Post a Comment