ஒவ்வொறு மனிதர்களுக்குள்ளும் வெளியே
சொல்லமுடியாத ஒரு நெருடல்கள் ஒளிந்துக்கொண்டிருக்கும். அது வாழும் இடம்,
வாழும் முறை, வேலைவாய்ப்பு, காதல், தன்னைசுற்றியுள்ளவர்கள், தன்னுடைய
குடும்பத்தில் உள்ள குறை போன்றவை.... இவைகள் நம்மை பொது இடத்தில்
சுதந்திரமாக இருக்கவிடாது. ஒரு சங்கடத்தை ஏற்படுத்தும். அதே போல் தான்
ஒவ்வொறு மனிதருக்கும் வைக்கும் பெயர்...
கிராமங்களில்
பார்த்தால் அவர்களின் குழந்தைக்கு வைக்கும் பெயர் அவர்களுடைய
குலதெய்வத்தினுடையதாகவும், தன்னுடைய முன்னோர்களுடையதாகவும் இருக்கும்
இப்படி பழைய பெயர்களை வைக்கும்போது அவர்கள் மனநிலை எப்படியிருக்கும் என்பதை
மையமாக வைத்து பெயரில் அப்படி ஒன்றும் இல்லை அவரவர் செய்யும்
சாதனையில்தான் இருக்கிறது வாழ்க்கை என்பதை காட்டி கைதட்டல் வாங்கும்
படம்தான் எதிர் நீச்சல்.
பல
வருடங்களாக குழந்தை இல்லாமல் பிறக்கும் சிவகார்த்திகேயனுக்கு அவரது அம்மா
சுகபிரசவம் நடந்தால் குலதெய்வத்தில் பெயரை வைப்பதாக வேண்டிக்கொள்கிறார்.
அதன்படி அவருக்கு “குஞ்சிதபாதசாமி” என்று பெயர் வைக்கிறார்கள். அந்த
பெயரால் வீடு, பள்ளி, கல்லூரி, நண்பர்கள் என எல்லா இடங்களில்
கிண்டலடிக்கப்படுகிறார் சிவகார்த்திகேயன். (எல்லோரும் அவரை குஞ்சி ஏன்றே
அழைக்கிறார்கள்)
இந்த பெயரரை
மாற்றிவிடவேண்டியதுதான் என்று முடிவெடுக்கும்போது அவரது குடம்பத்தில்
ஏதாவது அபசகுணங்கள் ஏற்படுகிறது. அதனால் அந்த பெயரை மாற்றாமல் இருந்து
விடுகிறார். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment