நடிகர்கள்: சத்யராஜ், வர்ஷா அஸ்வதி, மணிவண்ணன், சீமான், ரகுவண்ணன்
இயக்கம்: மணிவண்ணன்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
ஓளிப்பதிவு : டி.சங்கர்
தயாரிப்பு:எஸ். ரவிச்சந்திரன், கே சுரேஸ்
ஓர் அரசியல்வாதியும் அவரது அல்லக்கையும் என்று பெயர் வைத்திருக்கலாம் ...அட...கொக்காமக்கா-வில் ஆரம்பிக்கும் அதிரடி அரசியல் வசனம் படம் முடிந்து வீடு போய்ச் சேர்ந்த பின்பும் காதில் விழுந்துக்கொண்டிருந்தது....உய்..உய்..னு..
அட..கொக்காமக்கா மகாதேவிஅரசிளங்குமாரி காலத்தில் வரவேண்டிய படம் ..இப்போ ப்பே..பேய்..னு இரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசி நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் போன்ற காலகட்டத்தில் வந்திருப்பது (நமக்கு) போதாத காலம்.ஆனாலும் இரண்டு பெருசுகளின் அட்டகாசமான நக்கலும் விக்கலும்..நல்லா நேரம் போகிறது.
1994ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘அமைதிப் படை’ படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் வெளிவந்துள்ளது. பொதுவாக ஒரு படத்தின் இரண்டாம் பாகம் வெளி வந்தால், முதல் பாகத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது வழக்கமான ஒன்றுதான். அப்படி பார்க்கப் போனால், இந்த நாகராஜ சோழன் நம்மை கொஞ்சம் சோதித்துப் பார்க்கிறார்.
அரசியலில் பெரும்புள்ளியாக இருக்கும் நாகராஜ சோழன் தனது செல்வாக்கையும், முதல் மந்திரியின் ஊழல் மற்றும் கொலை, கொள்ளைகளை மிரட்டி, அரசியலில் துணை முதல் மந்திரி பதவியை பெற்றுக் கொள்கிறார். ஏற்கெனவே, கொலை, கொள்ளை, ஊழலில் திளைத்திருந்த நாகராஜ சோழனுக்கு துணை முதல் மந்திரி பதவி கொடுக்கப்பட்டதும் கூடுதலாக ஆட்டம் போடுகிறார். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment